அரசியார் மலரை முகர்ந்ததை மாலை கட்டும் திருப்பணியில் ஈடு பட்டிருந்த செருத்துணையார் என்பவர் கண்டார் . ஈசனுக்கு அர்ப்பணிக்க வைத்திருந்த மலரை முகந்தது பெரும் சீற்றத்தை அளித்தது . வேறெதுவும் யோசியாமல் கையிலிருந்த கத்தியால் அவள் மூக்கை சட்டென்று அறுத்து விட்டார் . அரசியார் வலி பொறுக்காமல் அலறினாள் . அந்த அலறல் சப்தம் கேட்டு ஈசன் சன்னதியிலிருந்த அரசன் பதைத்து போய் ஓடிவந்தான். ரத்தம் சொட்ட வேதனையில் தவித்து கொண்டிருந்த மனைவியை கண்டு பதறிப்போய் இக்கொடிய செயலை செய்தவர் யார் ? என்று வினவினார் . செருத்துணையார் அங்கு வந்து நடந்ததை விவரமாக சொன்னார் . அரசன் கோபம் திசை மாறி ஈசனுக்கு சமர்ப்பிக்க இருந்த மலரை தொட்ட அக்கையை அல்லவோ முதலில் தண்டித்து இருக்க வேண்டும் எ ன்று சொல்லி தன் வாளை உருவி அவள் கையை வெட்டினார் . அரசனுடை ய அதிசயமான பக்தியை வானவர்களையும் வியக்க செய்தது . ஐயன் உடனே தோன்றி அரசனுக்கு திவ்ய தரிசனம் அளித்து அரசியின் மூக்கும் கையும் பழையபடி வளர செய்து அரசனையும் வாழ்த்தினார் .
No comments:
Post a Comment