Saturday 17 August 2019

அரசியார்   மலரை   முகர்ந்ததை   மாலை   கட்டும்   திருப்பணியில்   ஈடு   பட்டிருந்த  செருத்துணையார்    என்பவர்    கண்டார் .  ஈசனுக்கு   அர்ப்பணிக்க   வைத்திருந்த   மலரை   முகந்தது   பெரும்     சீற்றத்தை   அளித்தது .   வேறெதுவும்   யோசியாமல்   கையிலிருந்த   கத்தியால்   அவள்  மூக்கை   சட்டென்று   அறுத்து   விட்டார் .  அரசியார்   வலி   பொறுக்காமல்   அலறினாள் .  அந்த   அலறல்   சப்தம்   கேட்டு    ஈசன்   சன்னதியிலிருந்த   அரசன்    பதைத்து   போய்   ஓடிவந்தான்.  ரத்தம்   சொட்ட   வேதனையில்  தவித்து   கொண்டிருந்த    மனைவியை   கண்டு   பதறிப்போய்   இக்கொடிய   செயலை   செய்தவர்   யார் ?  என்று   வினவினார் .  செருத்துணையார்   அங்கு   வந்து   நடந்ததை   விவரமாக   சொன்னார் .   அரசன்   கோபம்   திசை   மாறி   ஈசனுக்கு   சமர்ப்பிக்க   இருந்த   மலரை    தொட்ட   அக்கையை    அல்லவோ   முதலில்   தண்டித்து    இருக்க   வேண்டும்   எ ன்று   சொல்லி   தன்   வாளை   உருவி   அவள்   கையை   வெட்டினார் .   அரசனுடை ய   அதிசயமான   பக்தியை   வானவர்களையும்    வியக்க    செய்தது .  ஐயன்   உடனே   தோன்றி  அரசனுக்கு   திவ்ய   தரிசனம்   அளித்து    அரசியின்   மூக்கும்   கையும்   பழையபடி   வளர   செய்து   அரசனையும்   வாழ்த்தினார் .

No comments:

Post a Comment