Monday 12 August 2019

துறைக்கொண்ட   செம்பவள   இருளகற்றும்   சோதித்
தொன்மயிலை   வாயிலான்   அடியார்க்கும்   அடியேன் |
.
திருமயிலையில்  கடை  சாதியில்  பிறந்த   சிவனடியார்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .வாயிலார்   என்னும்   அப்பெரியார்   எம்பெருமானை   உள்ளமெனும்   பெரும்   கோயிலில்   இருத்திக்கொண்டு   மனம்   குளிர   வழிப்பட்டு   வந்தார் .  ஞான   விளக்கை   நெஞ்சுக்குள்ளே   ஏற்றி   ஒளி   மிளிற   செய்தார் .   மனதிலேயே   எல்லா  உபசாரங்களையும்   செய்து   மகிழ்வார் .   மங்கள   நீராட்டுவார்  .  அடியார்களிடம்   தாம்   கொண்டிருக்கும்   அன்பையே   பேராமுதாக   நெய்வேத்தியம்   செய்வார் .  எம்பெருமான்   வழிபாட்டையெல்லாம்   மனமுருகி   உள்ளத்திலேயே   குறைவர   செய்து      களங்கமில்லா   பக்தியுடன்   ஐயனை     மனம்  கரைய   வைத்தார்.ஐயன்   மனம்   மகிழ்ந்து   அவரை   தன்னில்   சேர்த்துக்கொண்டார் .

No comments:

Post a Comment