கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன் |
வட வெள்ளாற்றின் தென்கரையில் இருக்குவேளூர் என்றொரு ஊர் உள்ளது . அவ்வூரில் சிறந்த சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் அவ்வூர் எம்பெருமான் ஆலயத்தில் தினமும் திருவிளக்கேற்றும் தொண்டிலே ஈடுபட்டிருந்தார் . அவரை சோதனையாக வறுமை சூழ்ந்தது . அப்போதும் அவர் அத்திருப்பணியை விடவில்லை . ஒரு சமயம் தில்லை சென்று அம்பலக்கூத்தனை வணங்க சென்றார் . அப்போது தன் சொத்தையெல்லாம் விற்று எடுத்துக்கொண்டு தில்லையில் உள்ள திருப்புலீச்சரம் குடியேறி அங்குள்ள எம்பெருமான் ஆலயத்தில் தன் விளக்கேற்றும் திருப்பணியை தொடர்ந்தார் . கொண்டுசென்ற பணம் கரைந்தது . அவர் மனம் தளராமல் வயற்காட்டில் புல் வெட்டி விற்று தம் திருப்பணியை தொடர்ந்தார் . அதன் காரணமாக அவர் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டார். ஐயன் சோதனை யாரை விட்டது . ஒரு நாள் புல் விருபடவில்லை . உடனே அவர் அசரவில்லை ஈசனை மனதில் நிறுத்தி புல்லையே திரியாக்கி விளக்குகளை ஏற்றினார் . ஈசன் லீலை விளக்குகள் எரிந்தன . ஆனால் சோதனை புல் தீர்ந்தது ஆனால் சில விளக்குகள் மீதம் இருந்தன . சிறிதும் தயங்காமல் தன் தலைமயிரை திரியாக்க துணிந்தார் . ஈசன் தோன்றி அவரை தன்னில் சேர்த்துக்கொண்டார் .
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன் |
வட வெள்ளாற்றின் தென்கரையில் இருக்குவேளூர் என்றொரு ஊர் உள்ளது . அவ்வூரில் சிறந்த சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் அவ்வூர் எம்பெருமான் ஆலயத்தில் தினமும் திருவிளக்கேற்றும் தொண்டிலே ஈடுபட்டிருந்தார் . அவரை சோதனையாக வறுமை சூழ்ந்தது . அப்போதும் அவர் அத்திருப்பணியை விடவில்லை . ஒரு சமயம் தில்லை சென்று அம்பலக்கூத்தனை வணங்க சென்றார் . அப்போது தன் சொத்தையெல்லாம் விற்று எடுத்துக்கொண்டு தில்லையில் உள்ள திருப்புலீச்சரம் குடியேறி அங்குள்ள எம்பெருமான் ஆலயத்தில் தன் விளக்கேற்றும் திருப்பணியை தொடர்ந்தார் . கொண்டுசென்ற பணம் கரைந்தது . அவர் மனம் தளராமல் வயற்காட்டில் புல் வெட்டி விற்று தம் திருப்பணியை தொடர்ந்தார் . அதன் காரணமாக அவர் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டார். ஐயன் சோதனை யாரை விட்டது . ஒரு நாள் புல் விருபடவில்லை . உடனே அவர் அசரவில்லை ஈசனை மனதில் நிறுத்தி புல்லையே திரியாக்கி விளக்குகளை ஏற்றினார் . ஈசன் லீலை விளக்குகள் எரிந்தன . ஆனால் சோதனை புல் தீர்ந்தது ஆனால் சில விளக்குகள் மீதம் இருந்தன . சிறிதும் தயங்காமல் தன் தலைமயிரை திரியாக்க துணிந்தார் . ஈசன் தோன்றி அவரை தன்னில் சேர்த்துக்கொண்டார் .
No comments:
Post a Comment