அரசன் அவர் பதிலை கேட்டு நெகிழ்ந்து போனார் . நாத்தழுதழுக்க ''ஐயனே இதை என்னிடம் நேரில் கேட்டிருந்தால் என் பொக்கிஷத்தையே திறந்து விட்டிருப்பேனே? இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை . வேண்டியதை எடுத்துக்கொள்ளும் . என்று சொல்லி பொக்கிஷ அறையை திறந்து விட்டான் . அப்படியே சிவ தொண்டு செய்பவர்கள் யாரானாலும் எவ்வளவு ஆனாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று பறை சாற்றினான் . அவருடைய அந்த மேன்மையான குணத்தை பாராட்டாதவர் யாரும் இல்லை . இவ்வாறே பெரும் தொண்டு செய்து கொண்டே பலகாலம் வாழ்ந்து சிவனடி சேர்ந்தார் .
No comments:
Post a Comment