Wednesday 21 August 2019

மடல்   சூழ்ந்த   தார்நம்பி    இடங்கழிக்கும்     தஞ்சை
மன்னவனாம்   செருத்துணைதன்  அடியார்க்கும்  அடியேன் |

கோனாட்டில்   கொடும்பாளூர்   என்றொரு   நகரம் .  அதை   ஆண்ட   குறுநில   மன்னர்   இடங்கழியார்   ஆவார் .  சிவபக்தி    மிகுந்தவர் .  ஆலயங்களின்   திருப்பணி    செய்யவும்   நித்திய   பூஜைக்கும்    தாராளமாக   திரவியம்    வாரி   வழங்குவார் .  ஒரு   சமயம்   தானிய    கிடங்கில்   திருட்டுத்தனமாக   புகுந்து   தானியம்   கொள்ளை   அடித்த   ஒருவனை   காவலர்கள்   பிடித்து   கொண்டுவந்து   அரசர்   முன்   நிறுத்தினர் .  அவரை   பார்த்தால்   அப்படி   தவறான   செய்கை   செய்ய   கூடியவராக   தென்படவில்லை .   சிவபக்தராகவே    தோன்றினார் .   மன்னன்   அவரை   பார்த்து   'உம்மை    பார்த்தால்   கொள்ளை   அடிப்பவராக   தோன்றவில்லை  .  ஆனால்   குற்றவாளியாக   நிறுத்தப்      பட்டிருக்கிறீர் .   இது   உண்மையா ?'  என்று   வினவினார் .   அதற்கு   அவர்   ஆம்   ஐயா .   நான்   சிவனடியார்களுக்கு   அமுதுபடைக்கும்  பணி     மேற்கொண்டிருக்கிறேன் .  ஆனால்   என்னிடம்   தானியம்    தீர்ந்து   விட்டது .  ஆகையால்தான்   இவ்வாறு   செய்ய   நேர்ந்து   விட்டது என்று   பணிவுடன்   பதிலுரைத்தார் .     

No comments:

Post a Comment