மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் |
கோனாட்டில் கொடும்பாளூர் என்றொரு நகரம் . அதை ஆண்ட குறுநில மன்னர் இடங்கழியார் ஆவார் . சிவபக்தி மிகுந்தவர் . ஆலயங்களின் திருப்பணி செய்யவும் நித்திய பூஜைக்கும் தாராளமாக திரவியம் வாரி வழங்குவார் . ஒரு சமயம் தானிய கிடங்கில் திருட்டுத்தனமாக புகுந்து தானியம் கொள்ளை அடித்த ஒருவனை காவலர்கள் பிடித்து கொண்டுவந்து அரசர் முன் நிறுத்தினர் . அவரை பார்த்தால் அப்படி தவறான செய்கை செய்ய கூடியவராக தென்படவில்லை . சிவபக்தராகவே தோன்றினார் . மன்னன் அவரை பார்த்து 'உம்மை பார்த்தால் கொள்ளை அடிப்பவராக தோன்றவில்லை . ஆனால் குற்றவாளியாக நிறுத்தப் பட்டிருக்கிறீர் . இது உண்மையா ?' என்று வினவினார் . அதற்கு அவர் ஆம் ஐயா . நான் சிவனடியார்களுக்கு அமுதுபடைக்கும் பணி மேற்கொண்டிருக்கிறேன் . ஆனால் என்னிடம் தானியம் தீர்ந்து விட்டது . ஆகையால்தான் இவ்வாறு செய்ய நேர்ந்து விட்டது என்று பணிவுடன் பதிலுரைத்தார் .
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் |
கோனாட்டில் கொடும்பாளூர் என்றொரு நகரம் . அதை ஆண்ட குறுநில மன்னர் இடங்கழியார் ஆவார் . சிவபக்தி மிகுந்தவர் . ஆலயங்களின் திருப்பணி செய்யவும் நித்திய பூஜைக்கும் தாராளமாக திரவியம் வாரி வழங்குவார் . ஒரு சமயம் தானிய கிடங்கில் திருட்டுத்தனமாக புகுந்து தானியம் கொள்ளை அடித்த ஒருவனை காவலர்கள் பிடித்து கொண்டுவந்து அரசர் முன் நிறுத்தினர் . அவரை பார்த்தால் அப்படி தவறான செய்கை செய்ய கூடியவராக தென்படவில்லை . சிவபக்தராகவே தோன்றினார் . மன்னன் அவரை பார்த்து 'உம்மை பார்த்தால் கொள்ளை அடிப்பவராக தோன்றவில்லை . ஆனால் குற்றவாளியாக நிறுத்தப் பட்டிருக்கிறீர் . இது உண்மையா ?' என்று வினவினார் . அதற்கு அவர் ஆம் ஐயா . நான் சிவனடியார்களுக்கு அமுதுபடைக்கும் பணி மேற்கொண்டிருக்கிறேன் . ஆனால் என்னிடம் தானியம் தீர்ந்து விட்டது . ஆகையால்தான் இவ்வாறு செய்ய நேர்ந்து விட்டது என்று பணிவுடன் பதிலுரைத்தார் .
No comments:
Post a Comment