திருக்கடவுரில் காரியார் என்று பெயர் கொண்ட அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார் எம்பெருமான் பக்தரான அவர் தமிழில் மிக்க பாண்டித்தியம் உடையவர் . அவர் இனிய தமிழில் கோவை பாடி மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மனம் குளிர அப்பாடல்களுக்கு விளக்கமும் கூறி அவர்களை சந்தோஷ படுத்துவார் . அவர்களும் மிக்க மகிழ்ந்து அவருக்கு பரிசுகள் வழங்குவார்கள் . அதை காரியவர்கள் பெற்று கொண்டு தாம் வணங்கும் ஐயனுக்கு ஆலயங்கள் கட்டி அநேக தொண்டுகள் புரிந்து வந்தார் . சிவபெருமான் அவருடைய இத்தகைய அரிய சேவையில் மிக்க மகிழ்ந்து தன் நிழலில் ஏற்றுக்கொண்டார் .
No comments:
Post a Comment