Wednesday 7 August 2019

திருக்கடவுரில்    காரியார்   என்று   பெயர்   கொண்ட   அந்தணர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார்  எம்பெருமான்    பக்தரான   அவர்   தமிழில்   மிக்க   பாண்டித்தியம்   உடையவர் .   அவர்   இனிய    தமிழில்   கோவை   பாடி   மூவேந்தர்களிடமும்   சென்று   அவர்கள்   மனம்   குளிர  அப்பாடல்களுக்கு விளக்கமும்   கூறி    அவர்களை   சந்தோஷ   படுத்துவார் .  அவர்களும்   மிக்க  மகிழ்ந்து   அவருக்கு   பரிசுகள்   வழங்குவார்கள் .  அதை  காரியவர்கள்   பெற்று   கொண்டு   தாம்   வணங்கும்  ஐயனுக்கு   ஆலயங்கள்   கட்டி   அநேக   தொண்டுகள்   புரிந்து   வந்தார் .   சிவபெருமான்   அவருடைய   இத்தகைய   அரிய   சேவையில்   மிக்க   மகிழ்ந்து   தன்   நிழலில்   ஏற்றுக்கொண்டார் .

No comments:

Post a Comment