நாவுக்கரசருக்கு ஒரு குறை மனதை வாட்டிக்கொண்டிருந்தது . உமை அன்னை பாலூட்ட ஞானம் பெற்று ஐயன் அம்மை மீது பக்தி ததும்பும் பாடல்கள் பாடி பக்தர்களை மெய்மறக்கச்செய்யும் காழிப்பிள்ளையை தான் காலில் விழுந்து வணங்கி சந்திக்க எண்ணம் கொண்டார் . அனால் மாறாக அவர் எதிர்கொண்டு வந்து இவரை அழைத்து சென்றது அவர் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது . இப்போது சம்பந்தர் திருஆரூரிலிருந்து வரும்போது தான் சென்று வரவேற்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக இருந்தது . அவ்வாறே அவரை தொண்டர் குழாத்துடன் சென்று வரவேற்று மகிழ்ந்தார் . பிறகு இருவரும் சேர்ந்து பல தலங்களை சேவித்துக்கொண்டு திருவிழிமழலை அடைந்தனர் . விஷ்ணு பகவான் சக்ராயுதம் பெற வேண்டி சிவபெருமானை ஆயிரத்தெ ட்டு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தார் . அவரை சோதிக்க எண்ணிய எம்பிரான் அதில் ஒரு மலரை மறைத்தார் . பூஜையை பாதியில் நிறுத்த மனமில்லாத பெருமான் தன் ஒரு விழியை எடுத்து அர்ச்சிக்க முற்பட்டார் . ஐயன் அவரை தடுத்து நிறுத்தி அவருக்கு சக்ராயுதத்தை வழங்கினார் . இதன் காரணமாக அவ்வூர் திருவிழிமழலை என்று வழங்கலாயிற்று .
No comments:
Post a Comment