Friday 27 April 2018

நாவுக்கரசருக்கு   ஒரு   குறை   மனதை   வாட்டிக்கொண்டிருந்தது .  உமை   அன்னை  பாலூட்ட   ஞானம்   பெற்று   ஐயன்   அம்மை   மீது   பக்தி   ததும்பும்   பாடல்கள்   பாடி    பக்தர்களை   மெய்மறக்கச்செய்யும்   காழிப்பிள்ளையை   தான்    காலில்   விழுந்து   வணங்கி   சந்திக்க  எண்ணம்   கொண்டார் .  அனால்   மாறாக   அவர்   எதிர்கொண்டு   வந்து   இவரை   அழைத்து   சென்றது   அவர்   மனத்தை   உறுத்திக்கொண்டே   இருந்தது .  இப்போது   சம்பந்தர்   திருஆரூரிலிருந்து   வரும்போது   தான்   சென்று   வரவேற்க   வேண்டுமென்ற   ஆவல்   அதிகமாக   இருந்தது .  அவ்வாறே   அவரை   தொண்டர்   குழாத்துடன்   சென்று   வரவேற்று   மகிழ்ந்தார் .   பிறகு   இருவரும்  சேர்ந்து   பல   தலங்களை   சேவித்துக்கொண்டு   திருவிழிமழலை   அடைந்தனர் .  விஷ்ணு   பகவான்   சக்ராயுதம்   பெற   வேண்டி   சிவபெருமானை   ஆயிரத்தெ ட்டு   மலர்கள்   கொண்டு   அர்ச்சனை   செய்தார் .  அவரை   சோதிக்க   எண்ணிய   எம்பிரான்   அதில்   ஒரு   மலரை   மறைத்தார் .  பூஜையை   பாதியில்   நிறுத்த   மனமில்லாத   பெருமான்   தன்   ஒரு   விழியை   எடுத்து   அர்ச்சிக்க   முற்பட்டார் .  ஐயன்   அவரை   தடுத்து   நிறுத்தி   அவருக்கு      சக்ராயுதத்தை   வழங்கினார் .  இதன்   காரணமாக   அவ்வூர்   திருவிழிமழலை   என்று   வழங்கலாயிற்று .

No comments:

Post a Comment