அப்பர் பெருமானும் திருக்கோலக்காவிலிருந்து புறப்பட்டு தன் யாத்திரையை தொடங்கினார் . காவிரி கரையோரத்திலுள்ள அநேக தலங்களை தரிசித்து அங்கு குடிகொண்டிருக்கும் பரம்பொருளை பதிகங்களால் பாடி மகிழ்வித்து பரமானந்தம் எய்தினார் . அவர் அவ்வாறு திருப்புன்கூர் , மயிலாடுதுறை , ஐயன் அன்னையை மணமுடிக்க வேள்வி நடத்திய திருவேள்விக்குடி , திருஆவடுது றை , திருநாகேஸ்வரம் முதலிய தலங்கள் சில . அவர் சத்திமுற்றம் திருக்கோவிலை அடைந்து சிவக்கொழுந்திஸ்வரரை கண்டு வணங்கும்போது அவருக்கு ஒரு ஆவல் தோன்றியது . தாம் வயது முதிர்ந்து சக்தி இழந்து போவதற்குமுன் தன் தலைமீது ஐயனின் திருவடி சூட்ட வேண்டுமென்ற பேராவல் . ஈசனிடம் குறையை மனமுருக வெளியிட்டார் . தன் பக்தர்களின் குறை தீர்ப்பதில் என்றும் தயங்காத தயாளன் அசரீரியாக அப்பனே நல்லூருக்கு வா என்று அழைப்பு விடுத்தார் . அப்பர் புல்லரித்து போனார் . உடனே நல்லூருக்கு பயணமானார் . ஆலயத்திற்கு சென்று வணங்கி அந்த சன்னதியிலேயே ஈசன் பாதம் தன் தலையில் பதிவதை உணர்ந்து மெய்சிலிர்த்து உள்ளம் உருகி கண்ணீர் பெருக ; 'நினைந்துருக்கும் அடியாரை ' எனும் தாண்டகம் பாடினார் . நல்லுரை விட்டு நகர கால்கள் எழவில்லை . சில நாட்கள் அங்கு தங்கினார் .
No comments:
Post a Comment