Wednesday 25 April 2018

மக்கள்   தம் மீது   காட்டிய   அன்பில்   நெகிழ்ந்து   போன   அப்பர் தேவாசிரிய   மண்டபத்தில்   அடியார்களை   தொழுது   பிறகு   உள்ளே   சென்று   ஆலயம்   வலம்   வந்தார் .  அவ்வாறு   தொழுது   வரும்கால்    நீரில்   விளக்கேற்றிய   நமிநந்தி   அடிகளையும்   பாடினார் .உழவார   பணி   செய்து   கொண்டு   இருக்கும்கால்   திருவாதிரை   பெருவிழா   திருநாள்   வந்தது .  விதிவிடங்க   பெருமான்   வீதிவலம்   வந்த   கண்கொளா   காட்சியை   தொண்டர்களுடன்   சேர்ந்து   கண்டு    களி ப்பெய்தினார் .   அங்கிருந்து   அவர்   திருப்புகலூர்   வந்தார்   அங்கு   முருகன்   அடியார்   க்ருஹத்தில்   ஞானசம்பந்தரை   சந்திக்க   நேர்கிறது .   சம்பந்தர்   ஆதிரை   விழாவை   பற்றி   அப்பரிடம்   வினவ   'முத்துவிதானம் '  என்ற   பதிகம்   பாடி   விளக்கினார் .  அதை   கேட்ட   சம்பந்தர்   தானும்   அவ்விழாவை   கண்டு   களிக்க   ஆவல்   கொண்டு   கிளம்பி   சென்றார் .

No comments:

Post a Comment