மக்கள் தம் மீது காட்டிய அன்பில் நெகிழ்ந்து போன அப்பர் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களை தொழுது பிறகு உள்ளே சென்று ஆலயம் வலம் வந்தார் . அவ்வாறு தொழுது வரும்கால் நீரில் விளக்கேற்றிய நமிநந்தி அடிகளையும் பாடினார் .உழவார பணி செய்து கொண்டு இருக்கும்கால் திருவாதிரை பெருவிழா திருநாள் வந்தது . விதிவிடங்க பெருமான் வீதிவலம் வந்த கண்கொளா காட்சியை தொண்டர்களுடன் சேர்ந்து கண்டு களி ப்பெய்தினார் . அங்கிருந்து அவர் திருப்புகலூர் வந்தார் அங்கு முருகன் அடியார் க்ருஹத்தில் ஞானசம்பந்தரை சந்திக்க நேர்கிறது . சம்பந்தர் ஆதிரை விழாவை பற்றி அப்பரிடம் வினவ 'முத்துவிதானம் ' என்ற பதிகம் பாடி விளக்கினார் . அதை கேட்ட சம்பந்தர் தானும் அவ்விழாவை கண்டு களிக்க ஆவல் கொண்டு கிளம்பி சென்றார் .
No comments:
Post a Comment