Saturday 14 April 2018

ஆளுடை   பிள்ளையாரை   சந்திக்க   செல்வது   சாதாரணமா ?  தில்லை   விதிகளில்   வலமாக   புரண்டு   சென்றே   எல்லையை   அடைந்தார் .  பிறகு   காழியம்பதிக்கு   பயணமானார் .  சம்பந்த   பெருமானும்   புற   சமயத்தில்   வீழ்ந்த   வாகீசரை   ஐயன்   எத்தனை   சோதனைகளுக்கு   பின்   ஆட்கொண்டார்   என்ற   வரலாறை   அறிந்திருந்தார் . அத்தகைய   முதியவரை   சிறுவனான   தான்   சென்று   சந்திப்பதே   முறை   என்று   முடிவெடுத்து   தொண்டர்கள்   புடைசூழ   காழி   எல்லையில்   அவரை   வரவேற்க   சென்றார் .    அங்கு   வாகீசர்   காழிப்பிள்ளையை  வணங்க   குனிந்தவரை    தடுத்து   ' அப்பரே' என்று   அழைத்து   தழுவிக்கொண்டார் .    இருவரும்   பக்தி   வெள்ளத்தில்   மூழ்கினர் .  

No comments:

Post a Comment