ஆளுடை பிள்ளையாரை சந்திக்க செல்வது சாதாரணமா ? தில்லை விதிகளில் வலமாக புரண்டு சென்றே எல்லையை அடைந்தார் . பிறகு காழியம்பதிக்கு பயணமானார் . சம்பந்த பெருமானும் புற சமயத்தில் வீழ்ந்த வாகீசரை ஐயன் எத்தனை சோதனைகளுக்கு பின் ஆட்கொண்டார் என்ற வரலாறை அறிந்திருந்தார் . அத்தகைய முதியவரை சிறுவனான தான் சென்று சந்திப்பதே முறை என்று முடிவெடுத்து தொண்டர்கள் புடைசூழ காழி எல்லையில் அவரை வரவேற்க சென்றார் . அங்கு வாகீசர் காழிப்பிள்ளையை வணங்க குனிந்தவரை தடுத்து ' அப்பரே' என்று அழைத்து தழுவிக்கொண்டார் . இருவரும் பக்தி வெள்ளத்தில் மூழ்கினர் .
No comments:
Post a Comment