தலைநகரை அடைந்ததும் அரசன் தகுந்த தண்டனை அளிக்க திட்டமிட்டு சமண தலைவர்களை யோசனை கேட்டான் . அவர்கள் நாவுக்கரசரை சுண்ணாம்பு காள வாயில் இடுமாறு யோசனை கூறினர். நாவுக்கரசர் சிறிதும் அஞ்சவில்லை ஈசன் தன்னை காப்பான் என்ற முழு நம்பிக்கை அவரை இத்தண்டனையை கேட்ட பிறகும் சிறிதும் அசரவைக்கவில்லை . அவருக்கு மனக்கண்ணில் கண்டது 'ஈசன் திருவடி நிழலே '. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும்' இவ்வாறு அவர் அனுபவித்து பாடினார் . ஆறு நாட்கள் பிறகு திறந்தால் அவர் முன்பைவிட பொலிவுடன் வெளியே வந்தார் எல்லோருக்கும் அதிர்ச்சி . சமண தலைவர்கள் தங்களிடம் கற்ற பயிற்சிகளால்தான் இவ்வாறு வெளிவரமுடிந்தது என்று சொல்லி விஷமிட யோசனை கூறினர் . ஆலகால விஷமுண்ட ஐயன் துணை இருக்கும்போது இந்த விஷம் என்ன செய்யும் . அரசனுக்கு அதிர்ச்சி . ஆனால் சமணர்கள் விடுவதாக இல்லை . பட்டது யானையை விட்டு அதன் காலால் இடற செய்தனர் . நாவுக்கரசர் 'சுண்ணவெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் ' என்ற பதிகம் பாடி அஞ்சுவது யாதொன்றுமில்லை என பாட யானை மண்டியிட்டு வணங்கி சென்றது .
No comments:
Post a Comment