திருவீழிமிழலையில் அப்பரும் சம்பந்தரும் ஈசனை மனமுருக பதிகங்கள் பாடி மகிழ்ந்தனர் . அவ்வாறு மகிழ்ந்து இருக்கும்போது அவ்வூரில் பஞ்சம் தோன்றியது . நீர்நிலைகள் வற்றி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள் அதை கண்டு இருவரும் மிக மனவேதனை அடைந்தனர் . ஐயன் அவர்கள் கனவில் தோன்றி காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த துன்பத்தை கண்டு கவலை வேண்டாம் . விமானத்தின் கீழ் தினமும் கிழக்கிலும் மேற்கிலும் பொற்காசுகள் வைக்கப்படும் . அதைக்கொண்டு பண்டங்கள் வாங்கி மக்களின் பசி தீருங்கள். என்று கூறி மறைந்தார் . மறுநாள் அங்கு பொற்காசுகள் இருப்பதை கண்டு மகிழ்ந்தனர் . தண்டோரா போட்டு மக்களுக்கு அறிவித்து உணவு வழங்க திட்டமிட்டனர் . அப்பர் கடுமையாக உழைத்து உழவார பணி செய்து ஐயனை மகிழ்வித்தார் . சம்பந்தரோ தன் பக்தியாலும் பாடல்களாலும் மட்டுமே ஈசனை மகிழ்வித்தார் . ஆதலால் அவர் வாசியோடு கூடிய காசு பெற்றார் . ஆகையால் அக்காசை மாற்றி பொருள் வாங்க அதிக நேரம் பிடித்தது . ஈசனிடம் வேண்டி வாசியில்லாத காசு பெற்று தன் தொண்டை சரிவர நிறைவேற்றினார் . அவ்வூர் நிலைமை சீர் அடைந்தது .
No comments:
Post a Comment