Monday 16 April 2018

சம்பந்தர்   தந்தைக்கு   சமமாக   நாவுக்கரசரை   மதித்தார் .  அப்பா   என்றால்   கூட   மரியாதை   குறைந்து   விடும்   என்ற  எண்ணத்தில்   அப்பர்   என்று   அழைத்து   அவரை   மரியாதையுடன்   வணங்கி   வரவேற்றார் .  அது   முதல்   அவருக்கு   அப்பர்   என்ற  பெயரே   நிலைத்தது .  கூடி   இருந்த   தொண்டர்களும்   மகிழ்ச்சி   ஆரவாரம்   செய்தனர் .  இருவரும்   தோணியப்பர்   ஆலயத்தை   அடைந்து    பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தனர் .   அப்பரை   சம்பந்தர்   தன்   மடத்திற்கு   அழைத்து   சென்று   அமுது   செய்வித்து   சிறிது   நேரம்   உரையாடினர் .  அப்போது   சம்பந்தர்   தாம்   காவிரி   கரையோரம்   எழுந்தருளி   கோவில்கொண்டிருக்கும்   இறைவனை   தொழது   ஆனந்தம்   எய்தியதை   சம்பந்தர்   விளக்கியதை   கேட்ட   அப்பருக்கும்   அவ்வாறு   யாத்திரை   செய்து   எம்பெருமானை   வணங்க   பெரும்   ஆவல்    ஏற்பட்டது .  சம்பந்தரும்   அதற்கு  சம்மதித்து   திருக்கோலக்கா   வரை   சென்று   அவரை   வழி   அனுப்பினார் .

No comments:

Post a Comment