சம்பந்தர் தந்தைக்கு சமமாக நாவுக்கரசரை மதித்தார் . அப்பா என்றால் கூட மரியாதை குறைந்து விடும் என்ற எண்ணத்தில் அப்பர் என்று அழைத்து அவரை மரியாதையுடன் வணங்கி வரவேற்றார் . அது முதல் அவருக்கு அப்பர் என்ற பெயரே நிலைத்தது . கூடி இருந்த தொண்டர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் . இருவரும் தோணியப்பர் ஆலயத்தை அடைந்து பதிகங்கள் பாடி மகிழ்ந்தனர் . அப்பரை சம்பந்தர் தன் மடத்திற்கு அழைத்து சென்று அமுது செய்வித்து சிறிது நேரம் உரையாடினர் . அப்போது சம்பந்தர் தாம் காவிரி கரையோரம் எழுந்தருளி கோவில்கொண்டிருக்கும் இறைவனை தொழது ஆனந்தம் எய்தியதை சம்பந்தர் விளக்கியதை கேட்ட அப்பருக்கும் அவ்வாறு யாத்திரை செய்து எம்பெருமானை வணங்க பெரும் ஆவல் ஏற்பட்டது . சம்பந்தரும் அதற்கு சம்மதித்து திருக்கோலக்கா வரை சென்று அவரை வழி அனுப்பினார் .
No comments:
Post a Comment