அப்பர் நல்லூரில் சில நாட்கள் தங்கிவிட்டு திருப்பழனம் புறப்பட்டு சென்று அங்குள்ள ஈசனை சேவித்துக்கொண்டு பக்கத்திலுள்ள திங்களூர் செல்ல எண்ணி கிளம்பினார் . வழியெல்லாம் திருநாவுக்கரசர் மடம் , அன்ன விடுதிகள் , தண்ணீர் பந்தல் என அத்தனை தர்ம கைங்கைர்யங்களும் அவர் பேராலேயே இருப்பதை கண்டு வியப்பு மிகுதியால் அங்குள்ளவர்களை வினவினார் . அவர்கள் அவ்வூரில் அப்பூதி அடிகள் என்றொரு சிவனடியார் வாழ்வதாகவும் அவர் அப்பரடிகள் மீது அளவிலா பக்தி கொண்டவர் என்றும் அவரே அவர் பெயரில் இத்தனை தர்ம காரியங்களும் செய்வதாக கூறினர். ஆச்சர்யம் அடைந்த அப்பர் அவரை காண விரைந்தார் . அப்பூதியடிகளும் இவரை வரவேற்க வந்து கொண்டிருந்தார் . அப்பரை கண்டதும் அவரை வணங்கி அமுது செய்ய தமது கிருஹத்திற்கு அழைத்து சென்றார் . அப்பரும் ஆலயம் சென்று வந்து விடுவதாக கூறி சென்றார் . அப்பூதி அடிகளின் மனைவி அமுது தயாரித்து விட்டு தன் மகனை வாழை இலை பறித்து வர அனுப்பினார் . தோட்டத்தில் பையனை பாம்பு தீண்டியது . பையன் இலையை தாயிடம் கொடுத்துவிட்டு விஷம் தலைக்கேறி இறந்து போனான் . திரும்பி வந்த அப்பர் தெய்வ அருளால் நடந்ததை அறிந்து அவர்கள் மகனின் உடலை சுமந்து கொண்டு ஈசன் முன் கிடத்தி மனமுருக ' ஒன்று கொலாம் ' எனும் பதிகம் பாடி மனமுருக வேண்டினார் . ஆச்சர்ய தக்க விதமாக சிறுவன் துக்கத்திலிருந்து விழிப்பது போல் எழுந்து வந்தான் . பெற்றோர்களுக்கு ஆனந்தம் தாங்கவில்லை . அப்பர் நிகழ்த்திய இந்த அற்புதம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது .
No comments:
Post a Comment