இதனிடையில் பாடலிபுரத்தில் மறுநாள் காலை தருமசேனரை காணாத சமண சீடர்கள் பதறி போயினர் அவருடைய பேரறிவு காரணமாகவே அந்த பள்ளி பல்லவ மன்னனுடைய பேராதரவு பெற்று வளர்ந்து வந்தது . அவர் இல்லையென்றால் மன்னனிடமிருந்து மான்யம் பெறுவது கூட அறிதே . அவரை தேடி பார்த்து எங்கும் காணாமல் அவர் அறையில் அவருடைய உடை களையப்பட்டு கிடந்ததையும் மற்ற பொருள்களும் கிடந்ததை கண்டு அவர் நோயின் கடுமை தாங்காமல் தன் தமக்கையை தேடி தான் சென்றுருக்க வேண்டும் என்று ஊ கித்த னர் . மதம் மாறி விட்டிருப்பாரோ என்ற ஐயமும் எழுந்து கலங்கி போனார்கள் . எல்லோரும் அவரை தேடி வீரட்டானம் வந்தனர் . ஆனால் அதற்குள்ளேயே அவர் கோலத்தை கண்டு திகைத்தனர் . புத்தாடை கட்டி திருநீறு பூசி ருத்ராக்ஷம் அணிந்து உழவாரப்படையுடன் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் கோலத்தில் அவரை கண்டதும் காரியம் கைமீறி போய்விட்டதை உணர்ந்து பெரும் திகைப்பில் ஆழ்ந்தனர் .
No comments:
Post a Comment