மருள்நீக்கியார் நெகிழ்ச்சியோடு என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று புலம்பியபோது கருவறையிலிருந்து அசரீரி ஒலித்தது . தித்திக்கும் சொல்வளத்தால் எம்மை பாடிய நீர் இனி நாவுக்கரசன் என்னும் பெயருடன் உலக புகழ் அடைவாய் என ஒலித்தது . கேட்ட நாவுக்கரசர் புல்லரித்து போனார் . தனக்கு மறுவாழ்வளித்த சிவபெருமானுக்கே தன் வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார் . அவருக்கு தொண்டு செய்வதையே தமது பணியாக கொண்டார் . திலகவாதியாருக்கு சந்தோஷம் தாங்கவில்லை . தம்பிக்கு உழவார படையை கொடுத்து சிவாலயங்களில் பணியில் ஈடுபடுமாறு பணித்தார் . நாவுக்கரசரும் பெற்றுக்கொண்டு விரட்டானத்திலேயே பணியை துவங்கினார் .
No comments:
Post a Comment