திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்றொரு தலம் . அங்கு வேளாளரில் குறுக்கையர் என்றொரு வம்சம் . அவ்வம்சத்தில் பிறந்தவர் புகழனார் . அவ்வம்சத்தில் எல்லோராலும் வெகுவாக மதிக்கப்பட்டு அவர் களுக்கு தலைவராக வாழ்ந்தவர் . மாதினியார் அவரது மனைவியாவார் . இருவரும் மனமொத்த தம்பதிகளாக இல்லறம் நடத்தி வந்தனர் . தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது . அக்குழந்தைக்கு திலகவதி என்று பெயர் சூட்டி அருமை பெருமையுடன் வளர்த்து வந்தனர் . சில ஆண்டுகள் பின் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான் , தம்பதியருக்கு மிக்க சந்தோஷம் . பிள்ளைக்கு மருள்நீக்கியார் என்று பெயரிட்டு சிறு வயது முதலே சகல கலைகளையும் பயிற்றுவித்து வளர்த்தனர் . திலகவதிக்கு பன்னிரண்டு வயதான போது குலப்பண்புகள் நிறைந்த அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி செய்தி அனுப்பினார் கலிப்பகையார் என்பவர் . அவர் அந்நாட்டு மன்னனின் சேனாதிபதியாவார் . புகழனார் தம்பதியும் மன மகிழ்ச்சியோடு தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர் . சுபநாளையும் குறித்தனர் .
No comments:
Post a Comment