Saturday 10 March 2018

திருமுனைப்பாடி   நாட்டில்   திருவாமூர்   என்றொரு   தலம் .  அங்கு   வேளாளரில்   குறுக்கையர்   என்றொரு   வம்சம் . அவ்வம்சத்தில்   பிறந்தவர்  புகழனார் .   அவ்வம்சத்தில்   எல்லோராலும்   வெகுவாக  மதிக்கப்பட்டு  அவர் களுக்கு   தலைவராக   வாழ்ந்தவர் .  மாதினியார்   அவரது   மனைவியாவார் .  இருவரும்   மனமொத்த   தம்பதிகளாக  இல்லறம்   நடத்தி   வந்தனர் .  தம்பதியருக்கு   ஒரு   பெண்   குழந்தை   பிறந்தது .  அக்குழந்தைக்கு   திலகவதி   என்று   பெயர்   சூட்டி   அருமை   பெருமையுடன்   வளர்த்து   வந்தனர் .  சில   ஆண்டுகள்   பின்   அவர்களுக்கு   ஒரு   மகன்   பிறந்தான் ,  தம்பதியருக்கு   மிக்க   சந்தோஷம் .    பிள்ளைக்கு   மருள்நீக்கியார்   என்று   பெயரிட்டு   சிறு  வயது   முதலே   சகல   கலைகளையும்   பயிற்றுவித்து  வளர்த்தனர் .  திலகவதிக்கு   பன்னிரண்டு   வயதான போது    குலப்பண்புகள்   நிறைந்த       அவளை   திருமணம்   செய்து   கொள்ள  விரும்பி   செய்தி   அனுப்பினார்   கலிப்பகையார்   என்பவர் .  அவர்   அந்நாட்டு   மன்னனின்   சேனாதிபதியாவார் .  புகழனார்   தம்பதியும்   மன   மகிழ்ச்சியோடு   தங்கள்   சம்மதத்தை   தெரிவித்தனர் .  சுபநாளையும்   குறித்தனர் .

No comments:

Post a Comment