சகோதரி கொடுத்த திருநீறை பக்தியுடன் பெற்றுக்கொண்ட மருள்நீக்கியார் அதை நெற்றியிலும் உடலிலும் பூசிக்கொண்டார் . விடியற்காலை திலகவதியார் தம்பி யுடன் கோவிலுக்கு புறப்பட்டார் . கோவிலை நெருங்கும்போதே மருள்நீக்கியாருக்கு உடல் சிலிர்த்தது . பிராகாரத்தை வலம் வந்து சந்நிதி முன் வீழ்ந்து வணங்கினார் . அவருக்கு உண ர்ச்சிகள் குமுறி எழுந்தன . அவர் அறியாமல் அவர் வாய் கூற்றாயினவாறு எனும் பதிகத்தை தன் சூலை நோய் தீரவேண்டுமென பாடிற்று. இப்பதிகத்தை பாடி முடித்ததும் அவர் நோய் இறைவன் திருவருளால் மறைந்து போயிற்ற. மருள்நீக்கியாருக்கு ஐயனின் இத்திருவருளை நினைத்து நினைத்து உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் தரை தாரையாக பெருகிற்று . 'படுகுழியில் வீழ்ந்த இ ப்பாவியை மீட்கத்தான் இந்நோயை அளித்தாயோ ? உனக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என பலவாறு புலம்பினார் .
No comments:
Post a Comment