திலகவதியார் தம்பியின் நிலைகண்டு இரக்கம் கொண்டு தீக்குளிக்கும் எண்ணத்தை கைவிட்டு தம்பிக்கு துணை ஆனாள் . திருமண எண்ணத்தை அறவே கைவிட்டு உலக ஆசைகள் எதிலும் பற்று அற்றவளாய் ஈசனே கதியென்று வாழ தொடங்கினாள் . மருள்நீக்கியாரும் தண்ணீர் பந்தல் அமைப்பது அடியார்களுக்கு அன்னம் இடுவது போன்ற நற்பணிகளில் பணம் செலவு செய்து வந்தான் . இவ்வாறு வாழ்ந்து வந்தபோது மருள்நீக்கியாரின் மனம் சைவத்தை விட்டு மற்ற மதங்களை பற்றி ஆராய தொடங்கியது . அக்காவின் துரதிஷ்ட நிலை கண்டோ என்னவோ சைவ சமயத்தில் உயர்வை ஏற்றுக்கொள்ள தயங்கியது . மற்ற மதங்களை ஆராய எண்ணிய அவன் திடீ ரென்று ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லாமல் திருவாய்மூரை விட்டு புறப்பட்டு பக்கத்திலுள்ள பாடலிபுத்திரத்திற்கு சென்றான் .
No comments:
Post a Comment