Wednesday 14 March 2018

திலகவதியார்   தம்பியின்   நிலைகண்டு   இரக்கம்   கொண்டு   தீக்குளிக்கும்   எண்ணத்தை   கைவிட்டு    தம்பிக்கு   துணை   ஆனாள் .  திருமண  எண்ணத்தை   அறவே   கைவிட்டு   உலக   ஆசைகள்   எதிலும்   பற்று   அற்றவளாய்   ஈசனே   கதியென்று   வாழ   தொடங்கினாள் .  மருள்நீக்கியாரும்   தண்ணீர்   பந்தல்   அமைப்பது   அடியார்களுக்கு   அன்னம்   இடுவது   போன்ற   நற்பணிகளில்  பணம்   செலவு  செய்து   வந்தான் . இவ்வாறு   வாழ்ந்து   வந்தபோது   மருள்நீக்கியாரின்   மனம் சைவத்தை   விட்டு   மற்ற   மதங்களை   பற்றி   ஆராய   தொடங்கியது .  அக்காவின்   துரதிஷ்ட   நிலை   கண்டோ   என்னவோ  சைவ   சமயத்தில்   உயர்வை   ஏற்றுக்கொள்ள   தயங்கியது .   மற்ற   மதங்களை   ஆராய   எண்ணிய   அவன்  திடீ ரென்று   ஒரு   நாள்   ஒருவரிடமும்   சொல்லாமல்   திருவாய்மூரை   விட்டு   புறப்பட்டு    பக்கத்திலுள்ள   பாடலிபுத்திரத்திற்கு   சென்றான் .

No comments:

Post a Comment