பாகுகன் பாடலிபுத்திரம் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தார் . மருள்நீக்கியாருக்கு தாம் விரும்பி ஏற்ற சமயத்தில் தன் வேதனையை தீர்க்கும் மருத்துவம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தார் . தன் தமக்கையாரின் பாதத்தில் சரண் அடைவதே சரியான மார்க்கமாக உணர்ந்தார் . சமண மதத்தை தழுவிய தம்மை தமக்கையார் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என்பதை உணர்ந்து தம் உடைகளையும் மற்ற உடைமைகளையும் பள்ளியிலேயே விட்டுவிட்டு சாதாரண உடையுடன் தமக்கு நம்பகமான சிலருடன் இரவோடு இரவாக தமக்கையை நாடி புறப்பட்டார் . திருவதிகையை அடைந்து அக்காவின் காலடியில் நெடுஞசாங்கடையாக விழுந்து அவல் காலை பற்றிக்கொண்டார் .
No comments:
Post a Comment