Thursday 22 March 2018

பாகுகன்   பாடலிபுத்திரம்   சென்று   நடந்த   விவரத்தை   தெரிவித்தார் .   மருள்நீக்கியாருக்கு   தாம்   விரும்பி   ஏற்ற   சமயத்தில்   தன்  வேதனையை   தீர்க்கும்   மருத்துவம்   கிடைக்க   வாய்ப்பில்லை   என்பதை   உணர்ந்தார் .  தன்   தமக்கையாரின்   பாதத்தில்   சரண்   அடைவதே   சரியான   மார்க்கமாக   உணர்ந்தார் .  சமண   மதத்தை   தழுவிய   தம்மை   தமக்கையார்   ஏறெடுத்தும்   பார்க்கமாட்டார்   என்பதை   உணர்ந்து   தம்   உடைகளையும்   மற்ற   உடைமைகளையும்   பள்ளியிலேயே   விட்டுவிட்டு   சாதாரண   உடையுடன்   தமக்கு   நம்பகமான   சிலருடன்   இரவோடு   இரவாக   தமக்கையை   நாடி   புறப்பட்டார் .  திருவதிகையை   அடைந்து அக்காவின்    காலடியில்   நெடுஞசாங்கடையாக   விழுந்து   அவல்   காலை   பற்றிக்கொண்டார் .  

No comments:

Post a Comment