பாடலிபுத்திரத்தில் அந்த சமயத்தல் சமண மதம் ஓங்கி இருந்தது . பல்லவ மன்னன் பேராதரவு இருந்ததால் அங்கு சமண பள்ளி துவங்கப்பட்டு நிறுவப்பட்டு அம்மதம் பரப்பப்பட்டு தழைத்து வந்தது . மருள்நீக்கியார் அங்கு சென்றதும் அப்பள்ளியை அடைந்தான் .. இவனுடைய கூர்மையான அறிவு அவர்களை மயக்கியது . அவனை ஏற்றுக்கொண்டு அப்பள்ளி பொறுப்பையும் அளிக்க செய்தது . தன்னை ஆளாக்கிய சைவ சமயத்தை மறந்தான் . தருமசேனர் என்ற பெயருடன் புகழடைந்தான் .
சகோதரன் சென்ற பிறகு திலகவாதியாருக்கு திருவாய்மூர் கசந்தது . எம்பெருமானை தேடி திருவதிகைக்கு சென்று அங்கு ஆலயத்தில் தங்கி பூப்பறித்து எம்பெருமானுக்கு மாலை தொடுப்பது ஆலயத்தை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்துகொண்டு ஈசனே கதி என்று வாழ தொடங்கினாள் . அவள் மனம் தம்பியின் செய்கையால் மிகவும் நொந்து போயிற்று . அதை மட்டும் அவளால் தாங்கி கொள்ள இயலவில்லை . அவனுக்கு நல்ல அறிவு புகட்ட ஈசனை பிரார்த்தித்த வண்ணம் காலம் கடத்தினாள் .
சகோதரன் சென்ற பிறகு திலகவாதியாருக்கு திருவாய்மூர் கசந்தது . எம்பெருமானை தேடி திருவதிகைக்கு சென்று அங்கு ஆலயத்தில் தங்கி பூப்பறித்து எம்பெருமானுக்கு மாலை தொடுப்பது ஆலயத்தை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்துகொண்டு ஈசனே கதி என்று வாழ தொடங்கினாள் . அவள் மனம் தம்பியின் செய்கையால் மிகவும் நொந்து போயிற்று . அதை மட்டும் அவளால் தாங்கி கொள்ள இயலவில்லை . அவனுக்கு நல்ல அறிவு புகட்ட ஈசனை பிரார்த்தித்த வண்ணம் காலம் கடத்தினாள் .
No comments:
Post a Comment