மகிழ்ச்சியுடன் இரு தரப்பினரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர் . துரதிஷ்டவசமாக அப்போது வடபகுதியில் போர் துவங்கி கலிப்பகையார் படை நடத்தி போருக்கு செல்ல வேண்டிய நிலை . அவரும் போரில் வெற்றி வாகை சூடி வந்து திலகவதியை மணம் செய்து கொள்வதாக வாக்களித்து விட்டு போருக்கு சென்றார் . திருமணம் தடைப்பட்டதை தாங்க முடியாமல் புகழனார் சிறிது நாட்களில் மரணமடைந்தார் . மாதினியார் கணவன் இறந்த துக்கம் தாளாமல் கணவருடன் தானும் உடன்கட்டை ஏறி உயிரை துறந்தார் . அப்போது விதி விளையாடியது . போருக்கு சென்ற கலிப்பகையார் போர்க்களத்தில் வீரசொர்க்கம் எய்தினார் . செய்தி கேட்ட திலகவதியார் அனலிலிட்ட புழுவாய் துடித்தார் . மணமாகவில்லை என்றாலும் மனத்தால் அவரை கணவனாக வரித்து விட்டக்காரணத்தால் அவரை பிரிந்து வாழ மனம் ஒப்பாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்தார் . சிறுவனான மருள்நீக்கியார் அக்காவை கட்டிக்கொண்டு நீ செய்யும் இக்காரியம் சரியா தவறா நான் அறியேன் . ஆனால் பெற்றோர்கள் இல்லாத இந்நிலையில் சிறுவன் நான் தனித்து வாழ்வது சாத்தியமில்லை. நானும் உன்னுடன் தீக்குளிக்கிறேன் . என்று அழுதான் . திலகவதியார் நெஞ்சு பொறுக்காமல் தன் மனதை மாற்றிக்கொண்டு ஈசன் சேவை ஆ லையங்களில் உழவாரப்பணி இதையே தன் லட்சியமாக கொண்டு தவ வாழ்க்கை வாழ தொடங்கினார் .
No comments:
Post a Comment