Wednesday 21 March 2018

தருமசேனர்   வலியால்   துடிக்கலானார் .  பாடசாலையை   சேர்ந்த   சமணர்கள்   வைத்தியம்   செய்து   பார்த்தனர் .  ஆனால்   வலி   அதிகரித்தது . குறைவதற்கு   அறிகுறியே   காணவில்லை .  என்ன   செய்வது   என்று   புரியாமல்    தடுமாறினார் .  தாங்கள்  கற்ற  அத்தனை   வைத்திய   சாஸ்த்திரங்களை   பிரயோகித்தும்  ஒருவித   பயனும்   இல்லை .  ஈசன்   விளையாட்டு   அல்லவா ? அப்போதுதான்   தருமசேனருக்கு  தனக்காக   பெரிய   தியாகத்தை   செய்து    தனக்காகவே   வாழ்ந்த   தமக்கையின்   நினைவு   வந்து   அவளுக்கு   தாம்   இழைத்த   துக்கத்தை   நினைந்து   உள்ளம்   வேதனையால்   துவண்டது .  உடனே   தனக்கு   நம்பிக்கையான   நண்பன்   பாகுகனை திருவதிகை   வீரட்டானம்  அனுப்பினார் .  அவர்   திலகவதியிடம்   மருள்நீக்கியாரிடமிருந்து   வந்ததாக   சொல்லி   விவரத்தையும்   சொல்லி   அவளை   வரும்படி   அழைத்தான் .  அம்மையார்   புறச்சமயத்தை   சேர்ந்த   அப்பள்ளியை   தான்  ஏறெடுத்தும்   பாரேன்   என்று   சொல்லி   வெடுக்கென்று   சென்றுவிட்டாள் 

No comments:

Post a Comment