தருமசேனர் வலியால் துடிக்கலானார் . பாடசாலையை சேர்ந்த சமணர்கள் வைத்தியம் செய்து பார்த்தனர் . ஆனால் வலி அதிகரித்தது . குறைவதற்கு அறிகுறியே காணவில்லை . என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினார் . தாங்கள் கற்ற அத்தனை வைத்திய சாஸ்த்திரங்களை பிரயோகித்தும் ஒருவித பயனும் இல்லை . ஈசன் விளையாட்டு அல்லவா ? அப்போதுதான் தருமசேனருக்கு தனக்காக பெரிய தியாகத்தை செய்து தனக்காகவே வாழ்ந்த தமக்கையின் நினைவு வந்து அவளுக்கு தாம் இழைத்த துக்கத்தை நினைந்து உள்ளம் வேதனையால் துவண்டது . உடனே தனக்கு நம்பிக்கையான நண்பன் பாகுகனை திருவதிகை வீரட்டானம் அனுப்பினார் . அவர் திலகவதியிடம் மருள்நீக்கியாரிடமிருந்து வந்ததாக சொல்லி விவரத்தையும் சொல்லி அவளை வரும்படி அழைத்தான் . அம்மையார் புறச்சமயத்தை சேர்ந்த அப்பள்ளியை தான் ஏறெடுத்தும் பாரேன் என்று சொல்லி வெடுக்கென்று சென்றுவிட்டாள்
No comments:
Post a Comment