Friday 6 March 2020

சுந்தரர்   வரலாற்றை   கூறி   முடித்த   உபமன்யு    முனிவர்   கண்கள்   கலங்க   ''அடியார்களிடம்   இறைவன்    காட்டும்   அன்பு   விவரிக்க   ஒண்ணாதது ''  என்று   கூறி   அதை   எண்ணி   மெய்மறந்து   நின்றார் .  கூடியிருந்த   முனிவர்கள்   அடியார்கள்   நெஞ்சம்   நெகிழ்ந்தது . 
      சித்திரை     மாதம்   திருவாதிரை   நாள்   எம்பெருமானுக்கு    உகந்த   நாள்   அன்று   அருண்மொழி   தேவர்   பாடிவந்த   திருத்தொண்டர்   புராணம்   சரியாக   ஓர்   ஆண்டுக்குப்பின்      நிறைவு   பெற்றது .   
     மக்கள்    பக்திப்   பெருக்கோடு   அமைச்சரின்   இத்தொண்டை   வெகுவாக   போற்றி   கொண்டாடினர் .  அநபாய   சோழன்   மிக்க   மகிழ்ச்சியில்   மூழ்கி   இருந்தான் .   அமைச்சர்    பாடிய   இத்திருப்புராணத்திற்கு    மிக்க   பக்தியோடு   பூஜை    செய்து    அதை      யானை   மேல்       ஏற்றி   அமைச்சரை   அமர   செய்து   தானும்   அமர்ந்து   சாமரம்    வீசியபடி   தில்லை   நான்கு   வீதிகளிலும்   ஊர்வலமாக   வந்தார்        

No comments:

Post a Comment