Tuesday 3 March 2020

நீராடிக்கொண்டிருந்த   சேரமான்   இறைவன்    அருளால்   சுந்தரர்   கைலாயம்   செல்ல      போவதை    உணர்ந்தார் .   உடனே   குதிரையில்   ஏறி   அஞ்சைக்களம்   ஆலயத்தை    அடைந்தார் .  அனால்   அவர்   ஆலையத்தை   அடைவதற்கு      முன்பே    சுந்தரர்   கிளம்பி   விட்டிருந்தார் .   நிலைமை    மீறி   விட்டதை   உணர்ந்த   சேரமான்   குதிரையின்    காதில்   பஞ்சாக்ஷரம்   ஓதினார் .   குதிரை    ஆகாய   மார்க்கமாக   கிளம்பி   விரைந்து  முன்னே   செல்லும்    வெள்ளை   யானையை     நெருங்கி    சுந்தரரை   வலம்   வந்து   முன்னதாக    சென்று   கைலாயம்    அடைந்தார் .   சேரமானை   தொடர்ந்து   ஓடி   வந்த    வீரர்கள்   தங்களால்   அந்த    வேகம்   செல்ல   முடியாமல்         சோர்ந்து      போய்   தங்கள்   வாள்களால்    தங்களை   மாய்த்துக்கொண்டு   சிவபதம்   அடைந்தனர் .               

No comments:

Post a Comment