நீராடிக்கொண்டிருந்த சேரமான் இறைவன் அருளால் சுந்தரர் கைலாயம் செல்ல போவதை உணர்ந்தார் . உடனே குதிரையில் ஏறி அஞ்சைக்களம் ஆலயத்தை அடைந்தார் . அனால் அவர் ஆலையத்தை அடைவதற்கு முன்பே சுந்தரர் கிளம்பி விட்டிருந்தார் . நிலைமை மீறி விட்டதை உணர்ந்த சேரமான் குதிரையின் காதில் பஞ்சாக்ஷரம் ஓதினார் . குதிரை ஆகாய மார்க்கமாக கிளம்பி விரைந்து முன்னே செல்லும் வெள்ளை யானையை நெருங்கி சுந்தரரை வலம் வந்து முன்னதாக சென்று கைலாயம் அடைந்தார் . சேரமானை தொடர்ந்து ஓடி வந்த வீரர்கள் தங்களால் அந்த வேகம் செல்ல முடியாமல் சோர்ந்து போய் தங்கள் வாள்களால் தங்களை மாய்த்துக்கொண்டு சிவபதம் அடைந்தனர் .
No comments:
Post a Comment