Thursday 5 March 2020

இறைவன்   மிக்க   மகிழ்ச்சி    அடைந்து   சேராமனுக்கு   அவர்   எழுதிய   ஞான   உலாவை   பாட   அனுமதி   அளித்தார் .   தேவர்கள்   ஞானியர்கள்   கூடி   இருந்த   சபையில்    இறைவன்   முன்   பாடினார் .   இறைவன்   மனம்   மகிழ்ச்சி     அடைந்து   ''நீங்கள்   இருவரும்   இங்கு   நம்   கணங்களுக்கு   தலைவர்களாய்    இருந்து   வாருங்கள்   என்று    கூறி   வாழ்த்தி   அனுப்பினார் .ஆனால்   சுந்தரர்   முன்பு   செய்த   அதே   தொண்டுகளில்    ஆழ்ந்தார் .   சேரமானார்    கணங்களின்    தலைவரானார் . 
   ஆரூரிலிருந்து    பறவையாரும்   ஒற்றியூரிலிருந்து    சங்கிலியாரும்   கைலாயம்   வந்து    பழையபடி    கமலினி ,  அனந்திதை யாக   தேவியின்   சேடிகளாக    தங்கள்   பணிகளை   தொடர்ந்தனர் . 
    ஆரூரர்   அருளிய  ' தானெனை '   எனும்   பதிகம்   பக்தியுடன்   அஞ்சைக்களத்தில்   சேர்த்தனர் .   சேரமான்   பாடிய   ஞான உலா    திருப்பிடவூரில்    உலகம்   அறிய   செய்யப்பட்டது .   

No comments:

Post a Comment