தேவர்கள் வெள்ளை யானையை கோயில் வாயிலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று சுந்தரரை வணங்கி ''சுவாமி தங்களை கைலாயம் அழைத்து வர எம்பெருமான் எங்களை அனுப்பி வைத்தார் .'' என்று கூறி வாழ்த்தினர் . அதை கேட்ட ஆலாலசுந்தரர் மெய் சிலிர்த்து போனார் . இறைவனை வணங்கி துதித்து விட்டு கிளம்பினார் . வெளியே வந்து யானையை வலம் வந்து ஏறி அமர்ந்தார் . தேவர்கள் மலர் மாறி பொழிந்தனர் . தேவ துந்துபி முழங்கிற்று . இந்த அருமையான நேரத்தில் நண்பர் சேரமான் பெருமானார் இல்லையே என்று மனம் வருந்தினார் . பிறகு கைலாயம் நோக்கிப் புறப்பட்டார் . அடியார்கள் ஹர ஹர சிவ சிவ என்று கோஷம் எழுப்பினர் .
No comments:
Post a Comment