Thursday 5 March 2020

சுந்தரர்   இறைவனை   மீண்டும்    வணங்கி   ''ஐயனே   என்   நண்பன்   சேரமான்   பெ ருமானார்   வாயிலேயே   நிறுத்தப்பட்டார் .   தயை   கூர்ந்து   அவருக்கும்    கிருபை   செய்ய   பிரார்த்திக்கிறேன் ''  என்று   கேட்டுக்கொண்டார் .  உடனே   இறைவன்   தம்   கணங்களுக்கு   அவரையும்   அழைத்து   வருமாறு    ஆணையிட்டார் .   அவ்வாறே   அவரை   அழைத்து   வந்தனர் .   சேரமானார்    வந்ததும்   எம்பெருமான்    காலில்   விழுந்து    வணங்கினார் .    ஐயன் ' நாம்   உன்னை   அழைக்காதபோது   எப்படி   இங்கு   வந்தாய் '   என்று     வினவினார் .   அதற்கு   சேரமான்   ''ஆரூரரை    நான்   வணங்கிக்கொண்டே    வந்தேன் .   தங்கள்   அன்புமிக்க   அடியார்   மீது    நான்   கொண்ட   பக்தி   என்னை   தங்கள்   திருவடிகள்   வரை   கொண்டு   சேர்த்ததில்    ஆச்சர்யம்   என்ன   இருக்கிறது ?  நான்   தங்கள்   மீது    ஞான   உலா   ஒன்று     பாடினேன் .  அதை   உங்கள்    படிக்க   உத்தரவு    வேண்டுகிறேன் என்றார் .     

No comments:

Post a Comment