Tuesday 13 February 2018

திருசெய் ஞல்லூர்   சோழநாட்டில்   பழைமையான    பெருமை   வாய்ந்த   திருத்தலம் .  ஒரு   கட்டத்தில்   அந்நாட்டின்   தலையாகராகவும்   விளங்கிய   தலம் .  கந்தவேள்   சூரபதுமனை   வெற்றி   வாகை   சூடியதும்   இங்கு   லிங்கம்   பிரதிஷ்டை   செய்து   வணங்கிய   தலம் .  இவ்வாறு   பெருமை   பெற்ற   இத்தலத்தில்   நிறைய   சைவ   அந்தணர்கள்   வாழ்ந்ததில்   அதிசயமில்லை .  அங்கு   எச்சதத்தன்  என்றொரு   வேதியர்  தன்   மனைவி   பவித்திரையுடன்   வாழ்ந்து   வந்தார் .   அவர்களுக்கு   ஈசன்   அருளால்   ஒரு ஆண்   குழந்தை   பிறந்தது .  அக்குழந்தைக்கு   விசாரசர்மன்   எனப்   பெயரிட்டு   அருமையாக   வளர்த்து   வந்தனர் .   அவன்   பூர்வஜென்ம   புண்ணியத்தால்   வெகு   சிறிய   வயதிலேயே   வேத   சாஸ்த்திரங்கள்   ஆகமங்கள்   எல்லாவற்றிலும்   அபார   தேர்ச்சி   பெற்று   இருந்ததுடன்   சிவபெருமானிடம்   அபார   பக்திகொண்டு   விளங்கினான் .எப்போதும்   அவர்   சிந்தனையாகவே   இருந்தான் .

No comments:

Post a Comment