திருசெய் ஞல்லூர் சோழநாட்டில் பழைமையான பெருமை வாய்ந்த திருத்தலம் . ஒரு கட்டத்தில் அந்நாட்டின் தலையாகராகவும் விளங்கிய தலம் . கந்தவேள் சூரபதுமனை வெற்றி வாகை சூடியதும் இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கிய தலம் . இவ்வாறு பெருமை பெற்ற இத்தலத்தில் நிறைய சைவ அந்தணர்கள் வாழ்ந்ததில் அதிசயமில்லை . அங்கு எச்சதத்தன் என்றொரு வேதியர் தன் மனைவி பவித்திரையுடன் வாழ்ந்து வந்தார் . அவர்களுக்கு ஈசன் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது . அக்குழந்தைக்கு விசாரசர்மன் எனப் பெயரிட்டு அருமையாக வளர்த்து வந்தனர் . அவன் பூர்வஜென்ம புண்ணியத்தால் வெகு சிறிய வயதிலேயே வேத சாஸ்த்திரங்கள் ஆகமங்கள் எல்லாவற்றிலும் அபார தேர்ச்சி பெற்று இருந்ததுடன் சிவபெருமானிடம் அபார பக்திகொண்டு விளங்கினான் .எப்போதும் அவர் சிந்தனையாகவே இருந்தான் .
No comments:
Post a Comment