Sunday 25 February 2018

தந்தை   அடிப்பதையும்   பொருட்படுத்தாமல்   அவன்   பாலபிஷேகம்   தொடர்ந்ததால்   அவன்   தந்தையின்   கோபம்   வெறியாக   மாறியது .  கண்   மண்   தெரியாமல்   அவன்   மண்குடங்களில்   சேகரித்து   வைத்திருந்த   பாலை   அவர்   காலால்   உதைத்து   தள்ளினார் .  அதுவரை   தன்னை   மறந்து   ஈசன்   மீது   லயித்திருந்த   விசாரசர்மன்   திடுக்கிட்டு   ஐயனுக்கான   பாலை   காலால்   உதைத்த   பாவ   காரியத்தை   மன்னிக்க   முடியாமல்   பக்கத்தில்   இருந்த   குச்சியை   எடுத்து   ஒங்க   அது   மழுவாக   மாறி   அவன்   தந்தையின்   கால்களை   வெட்டி   அவரை   சாய்த்தது .  அப்போது   ஈசன்   அன்னையுடன்   விசாரசர்மன்   கையை   பிடித்து   அவனை   அணைத்து   கொண்டார் .  என்   பொருட்டு   தந்தையை   கொன்றாயே   என்று  சொல்லி   இனி  நானே   உன்   தந்தை   என்று   சொல்லி   தன்   கழுத்திலிருந்து   கொன்றை   மாலையை   கழற்றி   அவனுக்கு   போட்டார் .  இனி   எம்   திருத்தொண்டர்களுக்கு   நீயே   தலைவன்   யாம்   உண்ட   அமுது   எமக்கு   படைக்கப்படும்   எல்லாம்   உம்மையே   சேரும்படி   சண்டேஸ்வர   பதவி   உனக்கு   அளிக்கிறோம்  என்று    அனுகிரகித்தார்.  அவன்  தந்தைக்கும்    கால்கள்   வரச்செய்து   சிவபதம்   அளித்தார் .  பல   சிவாலயங்களில்   உத்சவத்தின்  போது   பஞ்ச   மூர்த்திகளாக   ஈசன்   அன்னயுடன்    ஐந்தாவது   மூர்த்தியாக   இவரும்   வீதிவலம்   வருவதை   காணலாம் .

No comments:

Post a Comment