தந்தை அடிப்பதையும் பொருட்படுத்தாமல் அவன் பாலபிஷேகம் தொடர்ந்ததால் அவன் தந்தையின் கோபம் வெறியாக மாறியது . கண் மண் தெரியாமல் அவன் மண்குடங்களில் சேகரித்து வைத்திருந்த பாலை அவர் காலால் உதைத்து தள்ளினார் . அதுவரை தன்னை மறந்து ஈசன் மீது லயித்திருந்த விசாரசர்மன் திடுக்கிட்டு ஐயனுக்கான பாலை காலால் உதைத்த பாவ காரியத்தை மன்னிக்க முடியாமல் பக்கத்தில் இருந்த குச்சியை எடுத்து ஒங்க அது மழுவாக மாறி அவன் தந்தையின் கால்களை வெட்டி அவரை சாய்த்தது . அப்போது ஈசன் அன்னையுடன் விசாரசர்மன் கையை பிடித்து அவனை அணைத்து கொண்டார் . என் பொருட்டு தந்தையை கொன்றாயே என்று சொல்லி இனி நானே உன் தந்தை என்று சொல்லி தன் கழுத்திலிருந்து கொன்றை மாலையை கழற்றி அவனுக்கு போட்டார் . இனி எம் திருத்தொண்டர்களுக்கு நீயே தலைவன் யாம் உண்ட அமுது எமக்கு படைக்கப்படும் எல்லாம் உம்மையே சேரும்படி சண்டேஸ்வர பதவி உனக்கு அளிக்கிறோம் என்று அனுகிரகித்தார். அவன் தந்தைக்கும் கால்கள் வரச்செய்து சிவபதம் அளித்தார் . பல சிவாலயங்களில் உத்சவத்தின் போது பஞ்ச மூர்த்திகளாக ஈசன் அன்னயுடன் ஐந்தாவது மூர்த்தியாக இவரும் வீதிவலம் வருவதை காணலாம் .
No comments:
Post a Comment