Saturday 24 February 2018

மறுநாள்   எச்சதத்தன்   மகன்   ஆவினங்களை   மேய   ஒட்டி   செல்லும்போது   அவன்   அறியாதவாறு   அவனை   பின்தொடர்ந்தார் .  விசாரசர்மன்   சிவலிங்கத்திற்கு     பூஜை   செய்ய   அமர்ந்தான் .  அவன்   தந்தை   அவன்   அறியாதவாறு   ஒரு   மரத்தில்   ஏறி   அமர்ந்து   அவனை   கவனித்தார் .  வழக்கம்போல்   தன்னிச்சையாக   பசுக்கள்   பாலை   சொரிந்தன .  மண்   பாண்டங்களில்   அப்பாலை   ஏந்தி   லிங்கத்திற்கு   தன்னை   மறந்து   அபிஷேகம்   செய்ய   தொடங்கினான் . இதை   கண்ட   எச்சதத்தன்   எல்லை   இல்லா   கோபத்துடன்   பாலை   இவ்வாறு   மணலில்   கொட்டி   வீணடிக்கிறாயா ?  என்று   கத்திக்கொண்டு   ஒரு   குச்சியை   எடுத்து   அவனை   அதனால்   விளாசினார் .  ஆழ்ந்த   பக்தியில்   இருந்த   அவன்   இவை   எதையும்  உணரும்   நிலையில்    இல்லை .

No comments:

Post a Comment