மறுநாள் எச்சதத்தன் மகன் ஆவினங்களை மேய ஒட்டி செல்லும்போது அவன் அறியாதவாறு அவனை பின்தொடர்ந்தார் . விசாரசர்மன் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய அமர்ந்தான் . அவன் தந்தை அவன் அறியாதவாறு ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து அவனை கவனித்தார் . வழக்கம்போல் தன்னிச்சையாக பசுக்கள் பாலை சொரிந்தன . மண் பாண்டங்களில் அப்பாலை ஏந்தி லிங்கத்திற்கு தன்னை மறந்து அபிஷேகம் செய்ய தொடங்கினான் . இதை கண்ட எச்சதத்தன் எல்லை இல்லா கோபத்துடன் பாலை இவ்வாறு மணலில் கொட்டி வீணடிக்கிறாயா ? என்று கத்திக்கொண்டு ஒரு குச்சியை எடுத்து அவனை அதனால் விளாசினார் . ஆழ்ந்த பக்தியில் இருந்த அவன் இவை எதையும் உணரும் நிலையில் இல்லை .
No comments:
Post a Comment