இவ்வாறு விசாரசர்மனுக்கும் ஆவினங்களுக்கும் உள்ள பிணைப்பு வளர்ந்தது . பசுக்கள் அவனை உரசி நின்று அவன் தடவி கொடுக்கும் போது அவை தன்னை அறியாமல் பால் சுரந்தன . அதை கண்ட விசாரசர்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது . தன் இச்சையாக அவைகள் சுரக்கும் பாலமிர்தத்தை ஈசனுக்கு அர்ப்பணித்தால் என்ன என்று யோசித்தான் . உடனே அதை செயல் படுத்த முடிவு செய்தான் மண்ணியாற்றின் கரையில் ஒரு அத்தி மரத்தை கண்டான் . அதுவே தகுந்த இடம் என கருதி ஆற்று மணலில் ஒரு லிங்க வடிவம் அமைத்து அவ்விடத்தை கோவிலாக்கினான் . பசுக்கள் தன்னிச்சையாக சொரியும் பாலை எடுத்து வந்து தான் வடிவமைத்த ஐயனுக்கு பால் அபிஷேகம் செய்ய தொடங்கினான் . பக்தியும் ஆனந்தமும் பெருக்கெடுக்க அவன் இத்தெய்வீக பணியை தொடர்ந்தான் . இவன் பாலை எடுத்து இவ்வாறு கைங்கர்யம் செய்ததால் பசுக்களின் சொந்தக்காரர்களுக்கு எந்த வித குறையும் ஏற்படவில்லை . பால் அளவு அதிகமாயிற்று என்று சொல்லலாம் .
No comments:
Post a Comment