Wednesday 21 February 2018

இவ்வாறு   விசாரசர்மனுக்கும்   ஆவினங்களுக்கும்   உள்ள   பிணைப்பு   வளர்ந்தது .  பசுக்கள்  அவனை   உரசி   நின்று   அவன்   தடவி   கொடுக்கும்   போது      அவை  தன்னை  அறியாமல்    பால்   சுரந்தன .  அதை   கண்ட   விசாரசர்மனுக்கு   ஒரு   யோசனை   தோன்றியது .  தன்   இச்சையாக   அவைகள்   சுரக்கும்   பாலமிர்தத்தை   ஈசனுக்கு   அர்ப்பணித்தால்   என்ன   என்று   யோசித்தான் .  உடனே   அதை   செயல்   படுத்த   முடிவு   செய்தான்   மண்ணியாற்றின்    கரையில்   ஒரு   அத்தி   மரத்தை   கண்டான் .  அதுவே   தகுந்த   இடம்   என   கருதி   ஆற்று   மணலில்   ஒரு   லிங்க   வடிவம்   அமைத்து   அவ்விடத்தை   கோவிலாக்கினான் .  பசுக்கள்   தன்னிச்சையாக   சொரியும்   பாலை   எடுத்து   வந்து   தான்   வடிவமைத்த   ஐயனுக்கு   பால்   அபிஷேகம்   செய்ய   தொடங்கினான் .  பக்தியும்   ஆனந்தமும்   பெருக்கெடுக்க   அவன்   இத்தெய்வீக   பணியை   தொடர்ந்தான் .  இவன்   பாலை   எடுத்து   இவ்வாறு   கைங்கர்யம்   செய்ததால்   பசுக்களின்   சொந்தக்காரர்களுக்கு   எந்த   வித   குறையும்   ஏற்படவில்லை .    பால்   அளவு   அதிகமாயிற்று   என்று   சொல்லலாம் .    

No comments:

Post a Comment