Wednesday 14 February 2018

ஒரு   நாள்   விசாரசர்மன்   பாடசாலை   மற்ற   மாணவர்களுடன்   செல்லும்போது   அவன்   கண்ட    காட்சி   அவனை   வெகுவாக   பாதித்தது .  அக்கிரகாரத்து    பசுமாடுகளை   மேய்த்து   செல்லும்  சிறுவன்   ஒரு   கன்று   முட்ட   வந்ததால்   கோபம்   கொண்டு   தன்   கையில்   இருந்த   தடியால்   துளியும்   இரக்கமின்றி   அதை   அடித்து   கொண்டிருந்தான் .  பதறிப்போன   விசாரசர்மன்   அவன்  கையிலிருந்து   தடியை   பிடுங்கி   எறிந்து   விட்டு   அவனை   கடுமையாக   கண்டித்தான் .  பசுக்ள்   காமதேனுவின்   வழிவந்தவை .  தெய்வாம்சம்   பொருந்திய வை  வணக்கத்திற்கு   உரியவை    முட்டவந்தால்   விரட்டி   விடாமல்   இப்படி   அடிப்பாயா?  என்று   அவனை  வெகுவாக   கண்டித்தான் .  ஆனாலும்   அவன்   மனம்   சமாதானம்   ஆகவில்லை .  உடனே   மறுநாள்   முதல்   பசுக்களை   தானே   மேய்க்க   அழைத்து     செல்ல   வேண்டும்   என்று   முடிவெடுத்தான் .  அதை   அடுத்த   நாள்   செயல்   படுத்தவும்   ஆரம்பித்தான் .

No comments:

Post a Comment