ஒரு நாள் விசாரசர்மன் பாடசாலை மற்ற மாணவர்களுடன் செல்லும்போது அவன் கண்ட காட்சி அவனை வெகுவாக பாதித்தது . அக்கிரகாரத்து பசுமாடுகளை மேய்த்து செல்லும் சிறுவன் ஒரு கன்று முட்ட வந்ததால் கோபம் கொண்டு தன் கையில் இருந்த தடியால் துளியும் இரக்கமின்றி அதை அடித்து கொண்டிருந்தான் . பதறிப்போன விசாரசர்மன் அவன் கையிலிருந்து தடியை பிடுங்கி எறிந்து விட்டு அவனை கடுமையாக கண்டித்தான் . பசுக்ள் காமதேனுவின் வழிவந்தவை . தெய்வாம்சம் பொருந்திய வை வணக்கத்திற்கு உரியவை முட்டவந்தால் விரட்டி விடாமல் இப்படி அடிப்பாயா? என்று அவனை வெகுவாக கண்டித்தான் . ஆனாலும் அவன் மனம் சமாதானம் ஆகவில்லை . உடனே மறுநாள் முதல் பசுக்களை தானே மேய்க்க அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான் . அதை அடுத்த நாள் செயல் படுத்தவும் ஆரம்பித்தான் .
No comments:
Post a Comment