சம்பந்தர் 16 வயதை அடைந்த போது அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய விரும்பினர் . பெற்றோர் இச்சையை பூர்த்தி செய்ய சம்மதிக்கிறார் .பூஉலகில் தன் கடமை முடிந்தது தெரிந்தும் சம்மதம் தெரிவிக்கிறார் .திரு நல்லூர் பெருமணம் என்னும் இடத்தில் திருமணம் நடக்கிறது .திருமண சடங்கு முடியும் தருவாயில் அங்கு பெரும் ஜோதி தோன்றுகிறது . அந்த ஜோதியில் திருமண த்தில் கலந்து கொண்ட அனைவரும் கலந்து சிவபதம் அடைகின்றனர் .சம்பந்தரும் தன் மனைவி கை பற்றிக்கொண்டு அந்த ஜோதியை வலம்வந்து ஜோதியில் கலக்கிறார் . அத்தருணத்தில் அவர் கடைசியாக பாடிய பதிகம் ,
காதலாகி கசிந்து கண்ணீ ர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
சிந்தை யால் மகிழ்ந் தேத்த வல்லாரெல்லாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே ..
காதலாகி கசிந்து கண்ணீ ர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
சிந்தை யால் மகிழ்ந் தேத்த வல்லாரெல்லாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே ..
No comments:
Post a Comment