ஒருநாள் அவன் பூஜை செய்ய வரும்போது லிங்கத்தின் கண்ணில் ரத்தம் வழிவதை காண்கிறான். அதை காண சகியாத அவன் தன ஒரு கண்ணை பிடுங்கி எடுத்து கண் தானம் செய்கிறான் . அந்த கண் பொருந்தி குருதி நின்றதும் பேரானந்தம் கொள்கிறான் . ஆனால் அந்தோ , அவரது மறு கண்ணில்ருந்து ரத்தம் கொட்ட தன் கால் கட்டை விரலை அந்த இடத்திற்கு அடையாளமாக வைத்துகொண்டு தன மறு கண்ணையும் பிடுங்க யத்தனிக்கிறான் . அப்போது அன்பே உருவான ஈசன் எதிரில் தோன்றி 'கண்ணப்பா ' என்று அழைத்து ஆர தழுவிக்கொள்கிறார் . இவர்கள் சிவபதம் அடைந்ததில் வியப்பென்ன ? ஈசனிடத்தில் திண்ணன் காட்டிய கலப்படமில்லாத பேரன்பு எல்லாவித ஆசார அனுஷ்டானங்களையும் கடந்து அவன் நெஞ்சில் அமர்கிறது . திண்ணன் உயர்ந்து கண்ணப்ப நாயனாரகிறான் .என்னே ஈசனின் அன்பு .
No comments:
Post a Comment