Monday, 10 November 2014

kuutraayina

சமண  தலைவனாக  மாறியிருந்த  மருள்நீக்கியார்  தன்  தமக்கையின்  காலடியில்  சரண்  அடைகிறார் . திலகவதியார்  தம்பியின்  நிலை  கண்டு  மிக வருந்தி  அவருக்கு  திருநீரை  பூசி  திருவீரட்டான  ஈசனை  சரண்  அடைய   செய்கிறார் . ஈசனும்  மனமிரங்கி  வாகீசா  என்று   அவரை  தன்  மீது  பாடுமாறு   அழைக்கிறார் . அது வரை  பாடி  அறியாத  வாகீசர்  பக்தி  பெருக்கெடுத்து  பாட  தொடங்குகிறார் . தன்  தமக்கையாரை  பின்பற்றி  உழவாரப்பணி  தொடங்குகிறார் . கண்
ணப்ப  நாயனாரைபோல்  இவரும்  ஈசனால்  பெயரிடப்படும்  பேறு  பெறுகிறார் . இவர்  பாடிய  எண்ணிறந்த  பாடல்களில்  நாம்  சில  பாடல்களே  கிடைக்கப்பெற்றோம் . இவருடைய  முதல்  பாடல்  இவரது  பிணி  நீக்கிய  பாடல் .
கூற்றாயினவாறு  விலக்ககிலீர்
   கொடுமை  பலசெய்தன  நானறியேன்
ஏற்றாயடிக்கே  இரவும்  பகலும்
    பிரியாது  வணங்குவன் எப் பொழுதும் 

No comments:

Post a Comment