Wednesday, 19 November 2014

angamalai

நாவுக்கரசர்  தன்  பக்தி  பயணத்தை  தொடர்கிறார் . அவர்  பாடிய அங்கமாலை  மனித பிறவி  எடுத்ததன்  பயனை  விளக்குகிறது . நமது  ஒவ்வொரு  அங்கமும்  படைக்கப்பட்ட  பயனை  கூறுகிறார் . தலையே  நீ  வணங்காய்  என்று  தொடங்கி , கடல் நஞ்சுண்ட  கண்டனை  காண    கண்கள் , எரிபோல்  மேனி  பிரான்  திறன்  கேட்க  செவிகள்  இவ்வாறே  கைகாள்  கூப்பி தொழீர் , அரன்  கோயில்  வலம்வர  கால்கள்  இவ்வாறே  சொல்லி ,உற்றார்  யார்  உளர்  உயிர்  கொண்டு  போகும்போது குற்றா லதுறை  கூத்தனல்லால்  என்று  வினவுகிறார் ,கடைசியாக  அவர் பாடுகிறார்
தேடி  கண்டுகொண்டேன்  திருமாலொடு  நான்முகனும்
தேடி  தேடொணா  தேவனை  என்னுள்ளே ///
பெரும் வேத தத்துவத்தை  அவர்  ஒரே  வரியில்  விவரித்து  விடுகிறார் . தன ஆன்மா  வேறல்ல  சிவம்  வேறல்ல  என்னும்  பெரும்  தத்துவத்தை  அதில்  அடக்கிவிட்டார் .    

No comments:

Post a Comment