நாவுக்கரசர் தன் பக்தி பயணத்தை தொடர்கிறார் . அவர் பாடிய அங்கமாலை மனித பிறவி எடுத்ததன் பயனை விளக்குகிறது . நமது ஒவ்வொரு அங்கமும் படைக்கப்பட்ட பயனை கூறுகிறார் . தலையே நீ வணங்காய் என்று தொடங்கி , கடல் நஞ்சுண்ட கண்டனை காண கண்கள் , எரிபோல் மேனி பிரான் திறன் கேட்க செவிகள் இவ்வாறே கைகாள் கூப்பி தொழீர் , அரன் கோயில் வலம்வர கால்கள் இவ்வாறே சொல்லி ,உற்றார் யார் உளர் உயிர் கொண்டு போகும்போது குற்றா லதுறை கூத்தனல்லால் என்று வினவுகிறார் ,கடைசியாக அவர் பாடுகிறார்
தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடி தேடொணா தேவனை என்னுள்ளே ///
பெரும் வேத தத்துவத்தை அவர் ஒரே வரியில் விவரித்து விடுகிறார் . தன ஆன்மா வேறல்ல சிவம் வேறல்ல என்னும் பெரும் தத்துவத்தை அதில் அடக்கிவிட்டார் .
தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடி தேடொணா தேவனை என்னுள்ளே ///
பெரும் வேத தத்துவத்தை அவர் ஒரே வரியில் விவரித்து விடுகிறார் . தன ஆன்மா வேறல்ல சிவம் வேறல்ல என்னும் பெரும் தத்துவத்தை அதில் அடக்கிவிட்டார் .
No comments:
Post a Comment