திருமுறைகள் , நாலாயிர திவ்யப்ரபந்தம் இரண்டுமே வேதத்தை அடிப்படையாக கொண்டவை . சிவபெருமானை வேதநாயகன் என்று கொண்டாடுகின்றனர் . நிறைய பதிகங்களில் வேதம் குறிப்பிட படுகின்றன ,தக்ஷிணா மூர்த்தியாக சிவன் சனகாதி முனி வர்களுக்கு வேத வேதாந்தங்களை போதிக்கிறார் . அதேபோல் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் என்று நம்மாழ்வாரை போற்றுகின்றனர் . ஆக சிவன்,விஷ்ணு இருவருக்கும் பொதுவானது வேதம் . சைவம் ,வைஷ்ணவம் இன்னும் பல கிளைகள் இருந்தாலும் , அவையாவும் இந்து சனாதன மதத்தின் கிளைகளே.வேதம் எல்லோருக்கும் பொது .
No comments:
Post a Comment