Saturday, 4 October 2014

poompavai (cont)

பூம்பாவை  விதி  வசத்தால்  நாகம் தீண்டி    இறந்தாள் . அவளை  பிறிய  மனமின்றி  சிவநேசர்  அவளது  எலும்பை யும் , சாம்பலையும்  ஒருகுடத்திலிட்டு  வைத்திருந்தார் . சில  காலத்திற்கு  பின் .சம்பந்தர்  திருமயிலை  கபாலீச்வரரை  வழிபட  மயிலை  வந்தார் . சிவநேசர்  மிக  துயரத்துடன்  தன்  மகளின்  சோக  கதையை  சம்பந்தரிடம்  தெரிவித்தார் . மனம்  நெகிழ்ந்த  சம்பந்தர்  கபாலீஸ்வரரை  நெஞ்சுருக  த்யானித்து  "மட்டிட்ட  புன்னை  யன் " என்னும்  பதிகத்தை  பாடி , அங்கு  ஈஸ்வரனுக்கு  நடக்கும்  ஒவ்வொரு  உத்சவத்தையும்  சொல்லி , இவை  அனைத்தயும்  காணாமல் " போதியோ"  பூம்பாவாய் என    பாடுகிறார் . ஈசன்  அருளால்  குடத்திலிருந்து  பூம்பாவை  உயிர்ப்பெற்று  வருகிறாள் . அளவிலா  ஆனந்தம்  கொண்ட  சிவநேசர்  தன்  மகளை  மணக்கும்படி  வேண்டுகிறார் .ஆனால்  தன்னால்  உயிர்ப்பிக்கப்பட்ட  பூம்பாவை  தனக்கு  மகளாவாள்  என்று  மறுத்து  சொல்லி  தன பயணத்தை  தொடர்கிறார்  சம்பந்தர் . இப்போதும்  மயிலை  கபாலீஸ்வரர்  உத்சவத்தில்  அறுபத்துமூவர்   அன்று  அங்கம்  பூம்பாவை  ஆக்கி  அருளல்  என்று  ஒரு நிகழ்ச்சி  நடைபெறுகிறது . அதில்  சம்பந்தர்  நிகழ்த்திய  இந்த  அற்புதம்  நினைவு   கூறப்படுகிறாது .

No comments:

Post a Comment