பூம்பாவை விதி வசத்தால் நாகம் தீண்டி இறந்தாள் . அவளை பிறிய மனமின்றி சிவநேசர் அவளது எலும்பை யும் , சாம்பலையும் ஒருகுடத்திலிட்டு வைத்திருந்தார் . சில காலத்திற்கு பின் .சம்பந்தர் திருமயிலை கபாலீச்வரரை வழிபட மயிலை வந்தார் . சிவநேசர் மிக துயரத்துடன் தன் மகளின் சோக கதையை சம்பந்தரிடம் தெரிவித்தார் . மனம் நெகிழ்ந்த சம்பந்தர் கபாலீஸ்வரரை நெஞ்சுருக த்யானித்து "மட்டிட்ட புன்னை யன் " என்னும் பதிகத்தை பாடி , அங்கு ஈஸ்வரனுக்கு நடக்கும் ஒவ்வொரு உத்சவத்தையும் சொல்லி , இவை அனைத்தயும் காணாமல் " போதியோ" பூம்பாவாய் என பாடுகிறார் . ஈசன் அருளால் குடத்திலிருந்து பூம்பாவை உயிர்ப்பெற்று வருகிறாள் . அளவிலா ஆனந்தம் கொண்ட சிவநேசர் தன் மகளை மணக்கும்படி வேண்டுகிறார் .ஆனால் தன்னால் உயிர்ப்பிக்கப்பட்ட பூம்பாவை தனக்கு மகளாவாள் என்று மறுத்து சொல்லி தன பயணத்தை தொடர்கிறார் சம்பந்தர் . இப்போதும் மயிலை கபாலீஸ்வரர் உத்சவத்தில் அறுபத்துமூவர் அன்று அங்கம் பூம்பாவை ஆக்கி அருளல் என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது . அதில் சம்பந்தர் நிகழ்த்திய இந்த அற்புதம் நினைவு கூறப்படுகிறாது .
No comments:
Post a Comment