Wednesday, 29 October 2014

appar

அடுத்த  3 திருமுறைகள்  சம்பந்தரால்  அப்பர்  என்று  பணியன்புடன்  அழைக்கப்பட்டவரும்  வீரட்டானத்துறை  ஈசனால்  நாவுக்கரசர்  என்று  பெயர்  சுட்டப்பட்டவருமான   அப்பர்  பெருமானால்  பாடப்பட்டவை . அவருடைய  இயற்பெயர்  மருண்னீக்கியர் . அவர்  சிறந்த  சிவ பக்தர்கள்
குடும்பத்தில்  பிறந்தவர் . அவருடைய  தமக்கையார்  திலகவதி  அம்மையார்  சிறந்த  சிவத்தொ ண்டர் . மருள்நீக்கியார்   சிறுவனாக  இருக்கும் போது திலகவதிக்கு  அவ்வூர்  சேனை  தலைவருடன்  திருமணம்   நிச்சயமானது . ஆனால்  துரதிஷ்டவசமாக  அவர்  திருமணத்திற்கு  முன்பே  போரில்  உயிர்துறந்தார் .

No comments:

Post a Comment