Thursday, 4 December 2014

maraikadu

வருத்த மடை ந்த  சம்பந்தர்  அப்பரை  வணங்கி  இவ்வூர்  பக்தர்கள்  தடையின்றி   கோபுர  வாயில்  வழி  வந்து  ஐயனை   தரிசிக்க  தாங்கள்  தான்  ஈசனை  துதித்து  பாடி  இக்கதவை  திறக்க செய்ய  வேண்டும்  என்று  விண்ணப்பிக்கிறார் . அப்பரும்  தங்கள்  சித்தம்  என்று  கூறி  இப்பதிகத்தை   பாடுகிறார் .
பண்ணின்  நேர்  மொழியாள்  உமை  பங்கரோ
மண்ணினார்  வலம்  செய்  மறை காடரோ
கண்ணினால்  உமை  காண  கதவினை
திண்ணமாக  திறந்தருள்  செய்மினே .
ஈசன்  அவர்  கானத்தில்  மயங்கி  இருந்ததால்  ஒன்பது  பதிகம்  பாடியபின்னும்   திறக்க   படாமை யால்  மனம்  நொந்த  அப்பர்  பாடுகிறார் .
அரக்கனை  விரலால்  அடர்த்திட்ட  நீர்
இரக்கம்  ஒன்றிலீர்  எம்பெருமானிரே
சுரக்கும்  புன்னைகள்  சூழ்  மறைக்காடரோ
சரக்க  இக்கதவம்  திறப்பின்மினே /
இப்பாடல்  முடிந்ததும்  கதவுகள்  திறந்து  மகிழ்ச்சி  வெள்ளம்  பொங்கியது . அப்பரும்  கண்ணீர்  மல்க  ஐயனை  வணங்கினர் .  

No comments:

Post a Comment