சண் டிகேஸ்வரர் தான் பூஜித்த சிவலிங்கத்தை உதைத்த தந்தையை காலை வெட்டி கொன்றார் . கண்ணப்ப நாயனார் கதை அறியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள் . திண்ணன் எனும் வேடுவ குலத்தை சேர்ந்த ஒன்றும் அறியாத வேடுவன் கண்ணப்பன் ஆனது எவ்வாறு ?காலஹஸ்தி காட்டில் வாழ்ந்து வந்த அவன் அங்கு கண்ட ஒரு சிவலிங்கத்தை கண்டு அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டு லிங்கத்தை காணாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாத நிலை அடைகிறான் . ஒரு சிவாசாரியார் பூஜை செய்வதை கண்டு தானும் செய்ய நினைத்து வாயில் நீரை எடுத்து கொண்டு கையில் காட்டு பூக்களையும் சமைத்த பன்றி மாமிசத்தையும் கொண்டு வந்து வாயிலுள்ள நீரால் அபிஷேகம் செய்து பூக்களை போட்டு அர்ச்சித்து மாமிசத்தை படைக்கிறான் .
No comments:
Post a Comment