Saturday, 12 July 2014

ஆன்மா  அழிவில்லாதது .சிருஷ்டி  ஆண்டவன்  தொழிலானாலும்  அவரவர்  பிறப்பு  ஆன்மாவையே   பொறுத்து  உண்டாகிறது .முன்  பிறவியின்  அவரவர்  செய்த  கர்ம  வினையின்  விளைவாகவே  நிகழ்கிறது . வேத ம்  காட்டிய  வழி  நடந்தவன்  உயர்  பிறவியும் , தவறான  வாழ்க்கை  வாழ்ந்தவன்  தாழ்ந்த  பிறவி எய்து  அல்லலுறுகிறான் . இது  இயற்கையின்  நியதி .  ஆனால்  அன்பே  வடிவான   ஈசன்  பிறப்பெய்திய   அத்தனை  ஜீவன்களும்   பிறவாநிலையான  சிவபதம்  அடைவதையே  விரும்புகிறான்.  ஈசன்  தன்  பக்தர்களை  அந்நிலைக்கு  அழைத்து  வர  எத்தனை  திருவிளையாடல்கள்   புரிகிறான் .

No comments:

Post a Comment