ஐயன் திருவருளால் வீழிமழலையில் பஞ்சம் நீங்கியது . மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பின. மக்கள் துன்பம் நீங்கி சகஜ நிலை அடைந்ததும் அப்பரும் சம்பந்தரும் அவ்வூரை விட்டு கிளம்பி ஆலயங்களை தரிசிக்க புறப்பட்டனர் . திருமறைக்காட்டை அடைந்தனர் மறைகள் ஆதிகாலத்தில் எம்பெருமானை பூசித்து தாளிட்ட பிறகு திறக்கப்படாமலேயே முடிகிடந்தது . அதனால் மக்கள் பக்கத்தில் வேறு ஒரு வாயில் வழியாகவே சென்று ஈசனை பூ சித்து வந்தனர் . இதனை கண்ட சம்பந்தர் அப்பர்பெருமானை தாங்கள் தான் கோபுர வாயிலை திறக்க செய்து மக்கள் துயரை தீர்க்க வழி செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டார் . அப்பரும் சம்மதித்து பண்ணின் நேர் மொழியாள் எனும் பதிகம் பாடினார் . அவர் பதிகம் முழுவதும் பாடி முடித்ததும் கதவுகள் திறந்தன . மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர் .
No comments:
Post a Comment