Monday 14 May 2018

ஐயன்   திருவருளால்   வீழிமழலையில்   பஞ்சம்   நீங்கியது .  மழை   பொழிந்து   நீர்நிலைகள்   நிரம்பின.  மக்கள்   துன்பம்   நீங்கி   சகஜ   நிலை   அடைந்ததும்   அப்பரும்   சம்பந்தரும்   அவ்வூரை   விட்டு   கிளம்பி   ஆலயங்களை   தரிசிக்க   புறப்பட்டனர் .    திருமறைக்காட்டை   அடைந்தனர் மறைகள்  ஆதிகாலத்தில்     எம்பெருமானை   பூசித்து   தாளிட்ட   பிறகு   திறக்கப்படாமலேயே    முடிகிடந்தது .  அதனால்   மக்கள்   பக்கத்தில்   வேறு   ஒரு   வாயில்   வழியாகவே   சென்று   ஈசனை   பூ சித்து   வந்தனர் .  இதனை   கண்ட   சம்பந்தர்   அப்பர்பெருமானை   தாங்கள்   தான்   கோபுர   வாயிலை   திறக்க   செய்து   மக்கள்   துயரை   தீர்க்க   வழி   செய்ய   வேண்டுமென்று     வேண்டிக்கொண்டார் .  அப்பரும்   சம்மதித்து   பண்ணின்  நேர்   மொழியாள்   எனும்   பதிகம்   பாடினார் .  அவர்   பதிகம்   முழுவதும்   பாடி   முடித்ததும்   கதவுகள்   திறந்தன .  மக்கள்   மகிழ்ச்சி   வெள்ளத்தில்  மூழ்கினர் .  

No comments:

Post a Comment