சுந்தரருக்கும் பரவையா ருக்கும் ஏற்பட்ட பிணக்கை தீர்க்க அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஆரூர்ப்பெருமான் வீதியில் தம் தாமரை பாதங்கள் நோக நடந்து பரவையார் இல்லத்திற்கு நடந்தே தூது போன அதிசய செய்தி நாடெங்கும் பரவியது . அந்த செய்தி திருப்பெருமங்கலத்து பெரும் சிவனடியார் ஏயர்கோன்கலிக்காமன் என்பவர் காதில் விழுந்த போது மிக்க வேதனை அளித்தது . இது ஐயனுக்கு ஏற்பட்ட பேரவமானமாக அவரை சுட்டெரித்தது . சுந்தரரை கொல்ல வேண்டுமென்ற வெறி ஏற்பட்டது . இதை கேள்விப்பட்ட சுந்தரர் மிக்க வருத்தம் அடைந்தார் . செய்வதறியாமல் ஆ ருர்த்தியாகேசனை சரணமென்று அடைந்தார். பக்தனின் மன வேதனையை பொறுக்காமல் ஈசன் கலிக்காமருக்கு சூலை நோயை கொடுத்து அவர் கனவில் தோன்றி இந்நோயை சுந்தரர் ஒருவர்தான் தீர்க்க முடியுமென்று தெரிவித்தார் . ஏயர்கோன் கலிக்காமர் சுந்தரரால் உயிர் பிழைப்பதை விட இறப்பதே மேல் என்று எண்ணி வயிற்றை கிழித்து கொண்டு உயிர் துறந்தார் . அப்போது அவரை காண அங்கு வந்த சம்பந்தர் அவர் மாண்ட செய்தி கேட்டு அவரும் தன்னை மாய்த்துக்கொள்ள துணிந்தார் .
No comments:
Post a Comment