Thursday, 16 January 2020

சுந்தரருக்கும்   பரவையா  ருக்கும்   ஏற்பட்ட    பிணக்கை   தீர்க்க   அவருடைய   வேண்டுகோளுக்கு   இணங்கி     ஆரூர்ப்பெருமான்   வீதியில்   தம்     தாமரை    பாதங்கள்   நோக   நடந்து   பரவையார்    இல்லத்திற்கு   நடந்தே    தூது   போன   அதிசய   செய்தி   நாடெங்கும்      பரவியது .  அந்த   செய்தி    திருப்பெருமங்கலத்து    பெரும்   சிவனடியார்   ஏயர்கோன்கலிக்காமன்   என்பவர்   காதில்   விழுந்த   போது   மிக்க   வேதனை   அளித்தது .   இது   ஐயனுக்கு   ஏற்பட்ட   பேரவமானமாக   அவரை  சுட்டெரித்தது .   சுந்தரரை   கொல்ல   வேண்டுமென்ற   வெறி   ஏற்பட்டது .  இதை   கேள்விப்பட்ட    சுந்தரர்   மிக்க    வருத்தம்   அடைந்தார் .   செய்வதறியாமல்     ஆ ருர்த்தியாகேசனை    சரணமென்று   அடைந்தார்.  பக்தனின்   மன    வேதனையை      பொறுக்காமல்    ஈசன்   கலிக்காமருக்கு   சூலை   நோயை   கொடுத்து    அவர்   கனவில்   தோன்றி    இந்நோயை    சுந்தரர்   ஒருவர்தான்   தீர்க்க   முடியுமென்று    தெரிவித்தார் .   ஏயர்கோன்   கலிக்காமர்      சுந்தரரால்   உயிர்         பிழைப்பதை  விட   இறப்பதே   மேல்    என்று   எண்ணி   வயிற்றை    கிழித்து  கொண்டு   உயிர்   துறந்தார் .   அப்போது    அவரை   காண   அங்கு    வந்த    சம்பந்தர்   அவர்   மாண்ட     செய்தி    கேட்டு    அவரும்   தன்னை    மாய்த்துக்கொள்ள    துணிந்தார் .      

No comments:

Post a Comment