Thursday, 20 February 2020

சுந்தரர்   அடையார்களுடன்    காட்டு   வழியாக   சோழநாடு   நோக்கி   பயணப்பட்டார் .   தன்னுடன்     சேரமான்    பரிசாக   அளித்த   பெரும்   பொருளையும்    சுந்தரர்   எடுத்து   சென்றார்  .  எம்பிரானுக்கு   தன்   அருமை   தோழன்    இத்தனை   காலம்   தன்னிடமிருந்து   மட்டுமே   பொருள்   பெற்று   வந்த   காரணத்தால்   வேறு   ஒருவரிடமிருந்து  அவரும்   தன்   பிரியமான   அடியான்   ஆனாலும்    பொன்னும்   மணியும்   பெறுவது    பொறுக்கவில்லை .   உடனே   சிவகணங்களை   வேடர்   உருவில்   சென்று   அப்பொருள்களை   கவர்ந்து   வருமாறு    ஆணையிட்டார் .  அவர்களும்   அவ்வாறே   அத்தனை    விலை   மதிப்பில்லாத   பொருள்களையும்   அவர்களிடமிருந்து   பறித்து   வந்தனர் .      அடியார்கள்    மிக்க   அதிர்ச்சி    அடைந்தனர் .  சுந்தரர்   வருந்தினாலும்   ஈசன்   இச்சை   எதுவோ   அதுதான்   நடக்கும் .   வருந்தி   ப யனில்லை  என்று    சமாதானம்   கூறினார் .     எல்லோரும்   திருமுருகன்பாண்டி   ஆலயம்   வந்து   சேர்ந்தனர் ..  சுந்தரர்   பதிகம்   பாடி        ஈசனை   தொழுதார் .  '' எம்பெருமானே   வனத்தில்   பொருள்களை   வேடுவர்கள்   கொள்ளை    அடிக்க   பார்த்தும்    காக்காமல்   இருந்தது   ஏனோ ?  என்று   நெகிழ்ந்து   வினவினார் .     

No comments:

Post a Comment