Sunday, 16 February 2020

சேரமான்   நாட்டு   மக்கள்   வெகு   நாட்கள்   பின்   நாடு   திரும்பும்   மன்னன்  அவருடைய   பெருமை   மிக்க   நண்பரும்   விருந்தாளியாக   வந்திப்பதையும்   கண்டு   பெரும்   மகிழ்ச்சியுடன்   கோலாகல   வரவேற்பு    அளிக்க   தயாரானார்கள் .   வீடுகள்தோரும்    தோரணங்கள்   மங்கள   வாத்தியங்கள்   மங்கள கோஷங்கள்   எல்லோரும்   புத்தாடைகள்   அணிந்து   ஆனந்தம்   பொங்க  எதிர்கொண்டு   அழைக்க    வந்தனர் .   சுந்தரர்   திருவஞ்சைக்கள   பெருமானை   வணங்கி   அரண்மனை   வந்தார் .  சேரமான்   தமது   சிம்மாசனத்தில்   அவரை   அமர   செய்து    மனைவியர்   நீர்   வார்க்க   தம்     கைகளால்    சுந்தரர்க்கு    பாத   பூஜை   செய்து  வரவேற்றார்.         

No comments:

Post a Comment