இவ்வாறு இருக்கையில் சுந்தரரை பற்றி கேள்விப்பட்டிருந்த சேரமான் பெருமான் கொடுங்கோளுரிலிருந்து புறப்பட்டு சுந்தரரை காண ஆரூர் வந்தார் . சுந்தரர் மகிழ்ந்து அவரை தம் மாளிகைக்கு மிக்க அன்போடு வரவேற்று இருவரும்மிக்க நேசத்துடன் பழக்கலாயினர் . அடியார்கள் அவர்கள் ஈருயிர் ஓருடலாக பழகுவதை கண்டு மகிழ்ந்து தம்பிரான் தோழராக இருந்த சுந்தரரை சேரமான்தோழர் என்று அழைக்க ஆரம்பித்தனர் . இருவரும் சேர்ந்து பல சிவாலயங்களை றாக சேவித்து மகிழ்ந்தனர் . இவ்வாறு இருக்கையில் நம்பிஆரூரருக்கு ஆலவாய் ஈசனை காண பேராவல் ஏற்பட்டது . சேராமானுக்கும் அதே பேராவல் ஏற்பட்டது . ஆலவாய் அண்ணல் தம் கைப்பட சேராமானுக்கு பாணபத்தருக்கு திரவிய உதவி செய்ய எழுதிய ஓலை கண்டது முதல் அப்பேராவல் இருந்து வந்தது . தன்னை ஒரு பொருட்டாக மதித்து தம் கைப்பட திருமுகம் எழுதிய அண்ணலின் பேரன்பை எப்படி மறக்க முடியும் ? இருவரும் பரவையிடம் விடை பெற்றுக்கொண்டு நாகப்பட்டினம் திருமறைக்காடு மற்றும் சில சிவத்தலங்களை சேவித்துக்கொண்டு திருப்பத்தூர் வழியாக வந்தடைந்தனர் .
No comments:
Post a Comment