Monday, 13 January 2020

அர்ச்சகர்    வேடத்திலிருந்த   எம்பெருமான்    ''பரவை   அவன்   தவறு   செய்து   இருக்கலாம் .  இப்போது   அவரை   மன னித்து    ஏற்பது   உனக்கு   நன்மை .  அவன்   உனக்காக  மிகவும்   ஏங்குகிறான் .   உன்னை   தேடி   இத்தனை   தூரம்    வந்திருக்கிறான் .''  என்றார் .   மிக   கோபமடைந்த   பரவை   கண்டிப்புடன்   அவரை   நோக்கி   ''இதற்கு மேல்   தாங்கள்   இங்கு   நிற்பது   அழகல்ல   உங்கள்மீது    நான்   வைத்திருக்கும்   மரியாதையை   இழந்து   விடுவீர்கள் ''  என்று   கோபமாக   உரைத்தாள் .   சிரித்தவாறு   கிளம்பினார்   அம்பலவாணர் .   சுந்தரர்   ஆலயத்தில்   தவித்துக்கொண்டிருந்தார் .  பரவை   பற்றிய   கவலையை   தவிர   ஞானிகளுக்கும்    தவமுனிவர்களுக்கும்   தேடி  அடையமுடியாத   அத்திருப்பாதங்களை   கேவலம்   சேவகனைப்போல்   தெருவில்   தெருவில்   அலையவிட்ட   பெரும்   பாதகம்   செய்து      விட்டோமே   என்ற   என்ற      பெரும்   குற்ற   உணர்வு   மறுபக்கம் .

No comments:

Post a Comment