அர்ச்சகர் வேடத்திலிருந்த எம்பெருமான் ''பரவை அவன் தவறு செய்து இருக்கலாம் . இப்போது அவரை மன னித்து ஏற்பது உனக்கு நன்மை . அவன் உனக்காக மிகவும் ஏங்குகிறான் . உன்னை தேடி இத்தனை தூரம் வந்திருக்கிறான் .'' என்றார் . மிக கோபமடைந்த பரவை கண்டிப்புடன் அவரை நோக்கி ''இதற்கு மேல் தாங்கள் இங்கு நிற்பது அழகல்ல உங்கள்மீது நான் வைத்திருக்கும் மரியாதையை இழந்து விடுவீர்கள் '' என்று கோபமாக உரைத்தாள் . சிரித்தவாறு கிளம்பினார் அம்பலவாணர் . சுந்தரர் ஆலயத்தில் தவித்துக்கொண்டிருந்தார் . பரவை பற்றிய கவலையை தவிர ஞானிகளுக்கும் தவமுனிவர்களுக்கும் தேடி அடையமுடியாத அத்திருப்பாதங்களை கேவலம் சேவகனைப்போல் தெருவில் தெருவில் அலையவிட்ட பெரும் பாதகம் செய்து விட்டோமே என்ற என்ற பெரும் குற்ற உணர்வு மறுபக்கம் .
No comments:
Post a Comment