Tuesday, 7 January 2020

சுந்தரர்   'மீளா   அடிமை   உமக்கே '  எனும்   பதிகம்   தனக்கே   உரிய   நட்புரிமையுடன்   பாடியது    ஐயனை   உருக்கியதில்   அதிசயம்   இல்லை .   உடனே   தன்   தோழனுக்கு   இரண்டாவது   கண்ணை   வழங்கியதும்   இயல்பே .    சுந்தரரும்   நன்றி   பெருக்கோடு   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்து   தம்பிரானையும்   மகிழ்வித்தார் .  தேவாசிரிய   மண்டபத்தை   அடைந்தார் .  அடியார்கள்   மகிழ்ச்சியுடன்   கூடி   இருந்தனர். ஆனால்      பரவையார்    சிறிதும்   இன்பம்    அடையவில்லை .    ஒற்றியூரில்   சுந்தரர்   சங்கிலியாரை   மணந்த     செய்தி   கேட்ட   அதிர்ச்சி   அவரை   மிக   துன்பத்தில்   ஆழ்த்தியது .  அவரை   காண கூட   விரும்பவில்லை .  அவரை   தன்   மாளிகையில்   அனுமதிக்ககூட    விரும்பவில்லை .   அடியார்கள்   சுந்தரர்     வந்த   செய்தி   சொல்லி   அமுது   செய்விக்க   சொல்ல   சென்ற   போது   பரவையார்   அவரிடமிருந்து   அடியார்கள்   வந்ததை   அறிந்து   காவலர்களிடம்   அவர்களை   அனுமதிக்க   வேண்டாம்   என்று   கட்டளையிட்டார் .   அவர்கள்   இச்செய்தியை   வந்து   சுந்தரரிடம்   தெரிவித்தபோது   சுந்தரர்   பெரிதும்   துக்கத்திற்கு   ஆளானார் .         

No comments:

Post a Comment